நடிப்பு, பாட்டு, இசையமைப்பு, கதையமைப்பு, இயக்கம் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர் சிம்பு.
பல்வேறு சொந்தப் பிரச்சினைகள் காரணமாக 3 ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படத்தில், வில்லால எஸ் ஜே சூர்யா, கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வந்தனர். சுமார் 5 ஆயிரம் துணை நடிகர்கள் கலந்துகொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த இடைவேளையில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. தற்போது மீண்டும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
மாநாடு திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்பதாகும். இந்நிலையில் படத்தின் முதல் தோற்றம் குறித்த முக்கியமான அறிவிப்பினை சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில் தன்னை சுற்றி பெரும் கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது நடுவில் அமைதியாக சிம்பு அமர்ந்து தொழுகை செய்வது போல போஸ்டர் ஒன்றினை பதிவிட்டு அதில் வரும் 21 நவம்பர் 10:44 மணிக்கு மேலும் பல முதல் தோற்றங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்