'யோகி', 'வடசென்னை' திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. '
முகவரி', 'காதல் சடு குடு', 'தொட்டி ஜெயா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை 'இருட்டு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்தபடத்தை இயக்கியுள்ளார். இதில் அமீருடன், '555' திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.." என்ற பாடலை பாடியிருக்கிறார்.
மிகுந்த பொருட் செலவில், நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் ‘அமைதிப்படை’யில் சத்தியராஜ் நடித்ததுபோல அமீர் அரசியலை நையாண்டி செய்துகொண்டே அதில் வலம்வரும் கெட்ட மனிதராக வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறாராம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.வரும் மார்ச் மாதம் திரையரங்கில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்