உலகில் மிகவும் சந்தோசமான மனிதன் இவர் : மூளைப் பரிசோதனை மூலம் நிரூபணம்
- Wednesday, 31 October 2012 21:41

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புத்தத் துறவியான 66 வயதாகும் 'Matthieu Ricard' என்பவரே உலகில் மிகவும் ஹேப்பியான மனிதர் என நிபுணர்கள் அவரது மூளையைப் பரிசோதனை செய்ததன் மூலம் நிரூபித்துள்ளனர்.
இவரது மூளையிலுள்ள கலங்களின் ஒழுங்கிலிருந்து அவரது மூளையே இதுவரை பரிசோதிக்கப் பட்டவற்றில் மிக அதிக மகிழ்ச்சி உணர்வுகளின் கொள்ளளவுடைய மூளை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவரது இந்த நிலைக்குக் காரணம் பல வருடங்களுக்கும் மேலாக இவர் செய்து வரும் உறுதியான தியானமே என இவர் கூறுகின்றார்.
இந்த நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் எனவும் அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது தியானத்தின் மூலம் தங்களது எண்ணங்களை பாஸிட்டிவ்வாக திரித்தல் அல்லது திருப்புதல் வேண்டும். இவ்வாறு செய்து இச் சாதனையைப் படைத்திருக்கும் இத்துறவி 40 வருடங்களுக்கு முன்னர் புத்த மதம் பற்றிக் கற்பதற்காக இந்தியா சென்றுள்ளார். மேலும் இவர் தற்போது திபேத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான புத்த மதத் துறவி தலாய் லாமா இன் நம்பிக்கைக்குரிய முக்கியமான துறவி என்பதுடன் புத்த சமயம் சம்பந்தப்பட்ட மேற்குலக நாட்டின் பட்டதாரியும் ஆவார்.
இன்றைய உலகின் மிகவும் ஹேப்பியான மனிதன் யார் என 'விஸ்கொன்ஸின்' பல்கலைக் கழகத்தில் தீவிரமாகத் தியானம் பழகும் உயர்ந்த பயிற்சியாளர்கள் 100 பேரின் மூளை ஆய்வு செய்யப் பட்டது. இதன் பொருட்டு ஒவ்வொரு துறவியினதும் மண்டை ஓட்டுக்கு மேலே 256 சென்சார்களுடன் கூடிய வயர் இணைக்கப்பட்டு மின் சமிக்ஞை பெறப்பட்டது. இந்த ஆராய்ச்சியை நரம்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்சன் மேற்கொண்டார்.
இந்த மூளைப் பரிசோதனை மூலம் முக்கியமாகத் தெரியப்பட்ட விடயம் என்னவென்றால் compassion எனப்படும் இரக்க உணர்வைத் தியானம் செய்தால் நமது மூளை நடுத்தரமான Gamma கதிர்களை வெளியிடும் எனவும் இவை நமது உணர்வு, கவனம், கற்றல், ஞாபகம் ஆகிய உறுப்புக்களை வீரியப் படுத்தி சந்தோச உணர்வை அதிகரிக்கின்றது என்பதாகும்.
இன்றைய உலகின் மிகவும் சந்தோசமான மனிதனான 'மத்தேயு ரிக்கார்ட்' தியானம் குறித்து 'The Art of Meditation' எனும் பிரபல புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

.jpg)