இத்துடன் எனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன் என்று, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக அண்மையில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட முடியாமல் நாடு திரும்பினார் சாய்னா நேவால். அது நாள் முதல் சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த அவர் நேற்று மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தார் என்று தெரிய வருகிறது. ஆனால், தம்மால் விளையாட முடியவில்லை என்றும், இத்துடன் தமது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே தாம் கருதுவதாகவும் சாய்னா கூறியுள்ளார்.
வருகிற 15ம் திகதி தொடங்க இருக்கும் சீனா சூப்பர் சீசனில் சாய்னா விளையாடுவாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
BLOG COMMENTS POWERED BY DISQUS