சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை தொடர்ந்து நவம்பர் வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், சரக்கு சேவை விமானங்களுக்கும், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும், இந்தியாவில் சிக்கியிருந்த வெளிநாட்டினரை அவரவர் தாய்நாட்டில் சேர்க்கவும் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன.