“நாட்டில் தற்போது நீடித்து வரும் அரசாங்கம் சட்டவிரோதமானது. அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கத்திற்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்படும்.” என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்போதுள்ள அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. எனவே, அரசாங்கம் பதவி விலக வேண்டும். மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டது.” என்றுள்ளார்.