கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் கட்டங் கட்டமாக தளர்த்தப்பட்டது.
அத்துடன், கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 04.00 மணிவரை மாத்திரம் ஊரடங்கு அமலில் இருந்தது வந்தது.
இந்நிலையில், இன்று தொடக்கம் ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்க தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.