“பௌத்த மதத் தலைவர்களும், மக்களும் கடந்த காலத்தில் நான் பாதுகாப்பு செயலாளராக இருந்தவேளை செயற்பட்டது மாதிரி, தற்போதும் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர், அவ்வேளை மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பில் விடுதலைப் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் என்னை இலக்குவைத்து குண்டை வெடிக்கவைத்தனர். அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு என்ன நடந்தது என்பது மக்களிற்கு தெரியும்.
நந்தனசேன கோட்டாபய ராஜபக்ஷவின் குணாதிசயத்திற்கு ஏற்ப செயற்பட நான் தயார். என்றாலும் எதிர்க்கட்சியினர் போல மோசமான அரசியலில் ஈடுபட நான் தயாரில்லை.
தவறிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது நீதித்துறையே. முன்னைய அரசாங்கம் போல நான் நீதித்துறையின் செயற்பாடுகளில் ஈடுபடவும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவும் தயாரில்லை.” என்றுள்ளார்.