பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை வருகிறார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அவரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த ஆண்டிற்கான தமது முதலாவது வெளிநாட்டு உத்தியோக பூர்வ விஜயத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்க உள்ளார்.