பொது மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள சட்டங்களையும் விதிகளையும் எளிமைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 18 பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
இலங்கை
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும்; ஜெய்சங்கர் – டக்ளஸ் சந்திப்பில் நம்பிக்கை!
இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்னுரிமை; கோட்டாவிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி!
கொவெக்ஸ் (COVAX Facility) வசதியின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினை கோட்டாவிடம் வலியுறுத்திய ஜெய்சங்கருக்கு கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு!
13ஆவது திருத்தச்சட்டத்தின் முன்னேற்றகரத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைபு நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கை நலன்களிற்கு முக்கியமானது: எஸ்.ஜெய்சங்கர்
ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானத்தை பேண வேண்டுமாயின், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாதது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இல்லாத நல்லிணக்கத்துக்காக யாரும் மாரடிக்க வேண்டாம்; சுரேனுக்கு மனோ பதில்!
“இந்த நாட்டில் நல்லிணக்கம் எங்கே இருக்கிறது? இல்லாத ஒன்றுக்காக யாரும் மாரடிக்க வேண்டாம்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.