இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படுவதற்கும், இலங்கையர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதற்கும் சாத்தியமுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்; வடமராட்சி மீனவர்கள் அழைப்பு!
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளது.
மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம்: ரணில்
“நாட்டுக்கு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை புதிய உத்வேகத்துடன் மீளக்கட்டியெழுப்பி மாற்றுக் கட்சியின் இடத்தை நிரப்பிக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது: சரத் பொன்சேகா
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களை ஆராய மூவரடங்கிய குழு; கோட்டா நியமனம்!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
முடிவெடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது: மருத்துவ அதிகாரிகள் சங்கம்
“முடிவெடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகின்றது.” என்று இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உதவிச் செயலாளர் மருத்துவர் சமந்தா ஆனந்த தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் கடமை: மஹிந்த
நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக பிள்ளைகளின் கல்வியை தாமதப்படுத்த முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.