இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.
கலாப்ரியா, லோம்பார்டி மற்றும் பீட்மாண்ட் ஆகிய சிவப்பு மண்டல பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், இதுவரை ஆரஞ்சு மண்டலங்களாக இருந்த லிகுரியா மற்றும் சிசிலி என்பவை மஞ்சள் நிறப் பிராந்தியங்களாகவும் மாற்றம் பெறும். இத்தாலிய சுகாதார மந்திரி ராபர்டோ ஸ்பெரான்சா வெள்ளிக்கிழமை இரவு இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன்படி நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் அந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சிவப்பு (அதிக ஆபத்து) மண்டலங்கள்: டஸ்கனி, அப்ருஸ்ஸோ, காம்பானியா, வால்லே டி ஆஸ்டா, போலோன்யா.
ஆரஞ்சு (நடுத்தர ஆபத்து) மண்டலங்கள்: பக்லியா, கலாப்ரியா, லோம்பார்டி, பீட்மாண்ட், எமிலியா ரோமக்னா, மார்ச்சே, அம்ப்ரியா, பசிலிக்காடா, ஃப்ரியூய்-வெனிசியா-கியுலியா.
மஞ்சள் மண்டலங்கள்: லிகுரியா, சிசிலி, சார்டினியா, லாசியோ, மோலிஸ், வெனெட்டோ, ட்ரெண்டோ மாகாணம்.
சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி எதிர்பார்த்ததை விட விரைவில் கிடைக்கலாம் !
இத்தாலியின் சில பிராந்தியங்களில் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டினாலும், சில பகுதிகள் கிறிஸ்மஸைச் சுற்றி உச்சத்தை எட்டும் என்றும், சுகாதார வல்லுநர்கள் இந்த தொற்றுநோயின் முடிவுக்கு வெகுதூரம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால், அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் உள்ளவர்கள் தங்கள் நகராட்சிக்குள் வாழவதற்கும், வேலை, படிப்பு, சுகாதாரம் அல்லது பிற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்