இத்தாலியப் பாராளுமன்றத்தில், ஆட்சியதிகாரத்திலுள்ள பிரதமர் கொண்டே அரசுக்கு, ஆதரவு வழங்கிய கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் விலகியதால் இத்தாலிய அரசாங்கம் பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
இத்தாலிய முன்னாள் பிரதமரும், 'இத்தாலியா விவா' கட்சியின் தலைவருமான மேட்டியோ ரென்சி, இத்தாலிய பிரதமர் யூசெப் கோண்டேவின் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை, இன்று புதன்கிழமை விலக்கிக் கொண்டு, ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் நெருக்கடியில் மூழ்கியது.
நீண்டகால அச்சுறுத்தலான நடவடிக்கையில், முன்னாள் பிரதமர் மேட்டியோ ரென்சி இன்று புதன்கிழமை மாலை தனது இத்தாலியா விவா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகுவதாக அறிவித்தார். இதனால் இத்தாலிய செனட்டில் பிரதமர் கொண்டேயின் அரசுக்கு முறையான பெரும்பான்மை இல்லாது போயுள்ளது.
தற்போதைய அரசாங்க கூட்டணி மூன்று கட்சிகளைக் கொண்டுள்ளது. ஜனரஞ்சக ஃபைவ் ஸ்டார் இயக்கம் (எம் 5 எஸ்), மைய-இடது ஜனநாயகக் கட்சி (பி.டி) மற்றும் ரென்சியின் சிறிய இத்தாலியா விவா. இத்தாலியா விவாவின் 18 செனட்டர்கள் விலகிக் கொண்டதனால், கோன்டேயின் அரசுக்கு இப்போது செனட்டில் புதிய தேவைப்படுகிறது. இருப்பினும் கீழ் சபையில், அவருடைய பெரும்பான்மை போதுமானதாக உள்ளது. இத்தாலியின் தற்போதைய நிலையில் இந்த அரசியல் பிளவும் வெளியேற்றமும், இத்தாலியின் பொது அரசியலில் பெரும் பின்னடைவினையும், சிக்கல்களையும் தரக் கூடும்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்