ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் பட்ஜெட் இந்திய ரூபாயில் 350 கோடி என அதன் தயாரிப்பாளர்களான லைக்கா புரொடக்ஷன் குழுவினர் அறிவித்திருந்தனர்.
பதிவுகள்
கார்த்திகை நினைவேந்தலும் புலம்பெயர் தேசங்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
சுதந்திர வேட்கையையும் மூர்க்கமான அர்ப்பணிப்பையும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அவை, விலை மதிக்க முடியாத தியாகங்களினால் நிறைந்தவை.
பிக்குக்களின் அரசியல்! (நிலாந்தன்)
மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி தமிழ் அரச ஊழியரை இனரீதியில் கீழ்மைப்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார்.
விடிவு வராது; இப்போதைக்கு ‘வீடியோ’தான்! (தெய்வீகன்)
மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான- இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது.
அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்று உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
கூட்டமைப்பை நோக்கி கூச்சல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்தித்து நிற்கின்றன. கானல் வெளியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தவர்கள் கொள்ளும் எரிச்சலுக்கு ஒப்பானது அந்த ஏமாற்றம். விளைவு, காட்டுக் கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதுமான கருத்துகளையும் விமர்சனங்களையும் வேண்டி நிற்கின்ற தருணத்திலேயே, இந்தக் கூச்சல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.
தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்ளல்! (நிலாந்தன்)
புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி இடம் கொடுக்காது என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.