ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றை கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவியேற்றதும், ஏற்கனவே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகிவிட்டது. அப்படியான நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், புதிய தீர்மானம் தொடர்பிலான ஆரம்ப வரைபு (Zero Draft) இலங்கைக்கு எந்தவித நெருக்கடிகளையும் வழங்காத ஒரு சூனியமான வரைபாகவே வெளிவந்திருக்கின்றது.
பதிவுகள்
வேண்டும் புதிய பாதை ! - முற்றிலும் புதிய அணுகுமுறை : ஏ.ஜி.யோகராஜா
இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தின் அரசியலும், இருப்பும், இயங்குதலும், குறித்த ஒரு மாற்றுப் பார்வையாக விரிகிறது இக்கட்டுரை. தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கும் கட்டுரையாளர் ஏ.ஜி. யோகராஜா, இளமைக் காலத்தில் இலங்கையில் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர்.
புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா ?
இன்று பெப்ரவரி 21. உலக தாய்மொழிநாள். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பினால், 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவிக்கப்பட்டது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது இளைய தலைமுறைக்கு தாய்மொழி அறிவு அவசியமா எனும் சிந்தனையின் வரைபாக "வாழ்வும் வளமும் " வலைப்பதிவில், பதிவர் சந்திரலேகா வாமதேவா அவர்களினால் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்ட்டுரையினை, அவருக்கான நன்றிகளுடன், இன்றைய நாளின் சிறப்பாக இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை; ஒரு புதிய நம்பிக்கை! (புருஜோத்தமன் தங்கமயில்)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் என்று பல்வேறுபட்ட தடைகளை பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாட்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு –கிழக்கின் எட்டு மாவட்டங்களினூடும் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது.
யாழ். சந்திப்புக்களும் புதிய தமிழ்ப் பேரவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
பதவி, பகட்டினை அடைவதற்கான வழியாக அரசியலைத் தேர்வு செய்தவர்கள், அவற்றை அடையும் வரையில் சும்மா இருப்பதில்லை. அதுவும் ஏற்கனவே பதவி, பகட்டோடு இருந்தவர்களினால், அவையின்றி சிறிது காலம் கூட இருக்க முடியாது. எப்படியாவது, குட்டையைக் குழப்பி மீன் பிடித்துவிட வேண்டும் என்கிற நினைப்பிலேயே அலைந்து கொண்டிருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அரங்கேறும் காட்சிகளைக் காணும் போது, அதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது.
‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டமும் வயித்தெரிச்சல் கோஷ்டிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்கள்’ அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புக்களும், குறு அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புக்களும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புக்கள்தான் போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன.
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காக திரள்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்து சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
More Articles ...
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன் கூறினாள்.
சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.