பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தடுப்பு முகாம்களில் பெண்கள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் - தமிழ்வாணி PDF Print E-mail
Written by editor   
Monday, 21 December 2009 06:06
AddThis Social Bookmark Button

சிறிலங்கா படையினரால் வவுனியா தடுப்புமுகாமில்  பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிவருகின்றனர் என அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்து  விடுதலை செய்யப்பட்ட  லண்டன்  மருத்துவபீட மாணவி தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.  லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு  அவர் வழங்கியுள்ள  பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இறுதி யுத்த காலப்பகுதியில்,  யுத்த பிரதேசமான வன்னிப் பகுதியில் இருந்த தமிழ்வாணி,  பின்ன அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களுடன் வந்தபோது , செப்ரெம்பர் மாதம் வரை வவுனியா மெனிக் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டு லண்டனுக்கு வந்ததும், இறுதியுத்த காலப்பகுதியில் நடந்த யுத்த மீறல்கள் பற்றிச் சாட்சியமளிப்பேன் என தொலைக்காட்சிகளுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது உறவினர்கள் சிறிலங்கா அரசினால் அச்சுறுத்தபட்டமை காரணமாக மெளனித்திருந்த அவர்   தற்போது  தனது உறவினர்கள்  முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் முகாம் கொடூரங்களை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

 செவ்வியில் அவர்,  வவுனியா தடுப்புமுகாமில் நடைபெறும்  கொடுமைகள் சொல்லி மாளாதவை. குறிப்பாகப் பெண்கள் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிவருவது பகிரங்கமாகவே நடைபெறுகிறது.  பெண்களை  பணத்துக்காகவும் உணவுக்காகவும் படையினருடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு வற்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதனை நான் முகாமிலிருந்தபோது அறிந்திருந்தேன் இது குறித்து யாரும் உயிரச்சத்தின் காரணமாகக் கதைப்பதில்லை.

முகாம்களில்   ஆண்கள் பெண்கள் என அனைவரும் குளிக்கும் இடம் ஒன்றாகவும்,  அதை எல்லோரும் பார்க்கக்கூடியதாகவும்   அமைந்துள்ளது. நான் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த குளியலிடத்துக்கு முன்பாக   காவலரண் ஒன்றிருந்தது. அங்கிருந்து  குளிப்பவர்களை காவல்துறையினர்   பார்க்கமுடியும். இதனை தவிர்ப்பதற்காக அதிகாலை மூன்று மணிக்கு, இருளில்  நான் அங்கு சென்று குளிப்பது வழக்கமாகவிருந்தது எனத் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் மகளும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கனிமொழி  உள்ளடங்கிய,   தமிழகத்திலிருந்து சென்ற எம்.பிக்கள் குழுவினர் இந்த முகாம் உட்பட, ஏனைய  அனைத்து முகாம்களும் திருப்திகரமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar Ismail Uvaizur Rahman
+1
 
 
We must pray to Al mighty Allah to recue the refugees
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar manoj kumar
0
 
 
The UN has to take immediate action against the Human Rights. The UN has to immediate action against the Srilankan Military
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 21 December 2009 06:35
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது