பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| அமெரிக்காவின் விசாரனைகளுக்கு பதில் அளிக்காத நிலையில் நேற்று நாடு திரும்பினார் சரத் பொன்சேக! |
| Written by Sara |
| Friday, 06 November 2009 09:35 |
போர்க் குற்றங்கள் தொடர்பில் அமெக்காவின் கேள்விகளுக்கு பதிலளிக்காத நிலையில் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று அதிகாலை அவசரமாக நாடு திரும்பினார். அமெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் காலை புறப்பட்ட அவர் அங்கிருந்து குவைத் ஊடாக சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 218 விமானத்தின் மூலம் நாடு திரும்பினார்.பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை நேற்று அதிகாலை 4.35 மணியளவில் வந்தடைந்த சரத் பொன்சேகாவை ஊடகவியலாளர்கள் எவரும் சந்திக்க இடமளிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் அவசரமாக அவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். தனிப்பட்ட ரீதியிலான விஜயமொன்றினை மேற்கொண்டு கடந்த 31ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றிருந்த சரத் பொன்சேகா, அந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றவர் என்பதோடு அங்கு நிரந்தர வதிவிடத்தையும் கொண்டவராவார். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த சரத் பொன்சேகாவிடம், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் நேர்முக விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மேற்படி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மைக்கல் டெரன்டினோ, குறித்த நேர்முக விசாரணைக்காக ஹொக்ளஹோமா நகரில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு மற்றும் சுங்க அலுவலகத்துக்கு 4ஆம் திகதி மாலை வருகை தருமாறு அழைத்திருந்தார். இதனையடுத்து அமெரிக்காவின் இந்த விசாரணை தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை தொடர்பு கொண்டு அறிவித்தார். இது தொடர்பான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் உரிய விசாரணைகளை தடுத்து நிறுத்துவதற்கான இராஜதந்திர முனைப்புக்களும் தீவிரப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை தகவல் ஆதாரமாகப் பயன்படுத்தவே அமெரிக்கா இவ்வாறானதொரு நேர்முக விசாரணையை நடத்த ஏற்பாடு செய்தள்ளது என்று கருதிய அரசாங்கம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அத்துடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ழூசியா புரூட்னஸ்ஸைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இது தொடர்பில் அவரிடமும் விசாரித்தார். இருப்பினும் இந்த நேர்முக விசாரணை தொடர்பில் தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என்று தூதுவர் அவரிடம் கூறினார். இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம மற்றும் அமெரிகாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோர் உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கை தொடர்பு கொண்டு இது தொடர்பில் விசாரித்தனர். அவரும் தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என்று தெரிவித்து விட்டார். இந்நிலையிலேயே சரத் பொன்சேகாவை நாட்டுக்கு திருப்பி அழைக்கும் ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அந்த ஏற்பாடுகளின் பிரகாரம் நேற்று அதிகாலை ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட அவரது குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நாடு திரும்பினர். கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகள் சூடு பிடித்திருந்த நிலையில் அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் அனைவரும் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் எனவும் அதன்மூலம் நாட்டிலிருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டது என்றும் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின் போது அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் கடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தினால் கடந்த மாதம் 67 பக்க அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுக்கப்பட்ட அந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த அரசாங்கம், இது தொடர்பில் துரித விசாரணைகளை நடத்துவதாகவும் அந்த திணைக்களத்திடம் உறுதியளித்தது. இவ்வாறானதொரு நிலைமையிலேயே அமெரிக்கா சென்றிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் நேர்முக விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Friday, 06 November 2009 09:42 |
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...









போர்க் குற்றங்கள் தொடர்பில் அமெக்காவின் கேள்விகளுக்கு பதிலளிக்காத நிலையில் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று அதிகாலை அவசரமாக நாடு திரும்பினார். அமெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் காலை புறப்பட்ட அவர் அங்கிருந்து குவைத் ஊடாக சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 218 விமானத்தின் மூலம் நாடு திரும்பினார்.
உங்கள் கருத்துக்கள்