இலவச நியூஸ்லெட்டர்..
இது புதிசு!
4தமிழ் மீடியாவின் அனைத்து ஆடியோ நிகழ்ச்சிகளையும் டவுண்லோட் செய்ய இங்கே.

தொலைபேசியில் கேட்டு மகிழ இங்கே. http://my.podcast.com/4tamilmedia/mobile/
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
| வடமாகாணத்தில் 62 அரச வைத்திய சாலைகள் இயங்குகின்றன - நிமல் சிறிபால டி சில்வா |
| Written by Sara |
| Friday, 06 November 2009 11:42 |
வட மாகாணத்தில் தற்போது 62 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற அதேவேளை, அங்கு 30 மருந்தகங்களும் செயற்பட்டு வருவதாகவும் 408 வைத்தியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தகவல் வெளியிட்டார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரணவினால் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், யாழ். மாவட்டத்தில் 27 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல் கிளிநொச்சியில் 9 வைத்தியசாலைகளும்; முல்லைத்தீவில் 6 வைத்தியசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 10 அரச வைத்தியசாலைகளும் செயற்பட்டு வருகின்றன. இந்த 62 வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் என 408 பேர் கட மையாற்றுகின்றனர். அத்துடன் 823 தாதியர் உட்பட இம்மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 301 பேர் சுகாதார சேவை பணிபுந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள வைத்தியசாலைகளில் தற்போது பாவனையில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 138 ஆகும் என்றார். |
| Last Updated on Friday, 06 November 2009 11:54 |
- சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா? - 2
- மஹிந்த ராஜபக்ச - எஸ்.பி சந்திப்பு!? - கட்சித்தாவலுக்கு அறிகுறி?
- தெலுங்கானா மக்களுக்கு வேலை வாய்ப்புக்கான 85 சத வீத இட ஒதுக்கீடு - புதிய மசோதா
- யாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை
- பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 1000 பேர் சென்னையில் கைது.
- ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு இராணுவ தளபதிகளே காரணம் - கோத்தபாய மறைமுக தகவல்!
- 7550 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இராட்சத 'எருது' மண்டையோடு கண்டுபிடிப்பு!

.jpg)





வட மாகாணத்தில் தற்போது 62 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற அதேவேளை, அங்கு 30 மருந்தகங்களும் செயற்பட்டு வருவதாகவும் 408 வைத்தியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தகவல் வெளியிட்டார்.
உங்கள் கருத்துக்கள்