பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| சிகிச்சைக்காக சென்ற மனைவியை காணவில்லை - HRW விடம் முறைப்பாடு |
| Written by Sara |
| Friday, 06 November 2009 11:55 |
முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற கடும் சண்டைகளின்போது, பதுங்குகுழியில் பாதுகாப்பிற்காக இருக்கையில் காயமடைந்த தனது மனைவி, இராணுவத்தினரால் சிகிச்சைக்காக
அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பு அவர் இருக்குமிடம் தெரியாததனால், அவரைக் கண்டு பிடிப்பதற்கு அவரது கணவன் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார்.இது தொடர்பாக சுந்தரலிங்கம் தயாபரன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். தற்போது அவர் வவுனியா நெலுக்குளம் பிரதேசத்தில், அம்மன் கோவில் வீதி, சாம்பல் தோட்டத்தில் இருக்கின்றார். அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி டிப்போச் சந்தி ஐந்து வீட்டுத்திட்டத்தில் நான், எனது மனைவி வேணி என்றழைக்கப்படும் அருந்ததி, எனது மகன் அனுஷனுடன் வாழ்ந்து வந்தேன். ஷெல் தாக்குதல்கள், விமானத் தாக்குதல் நிலைமைகள் காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து பல இடங்களுக்கும் சென்று இறுதியாக முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்திருந்தோம். அந்தப் பகுதியில் நடைபெற்ற கடும் சண்டை காரணமாக, பதுங்குகுழியில் நாங்கள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி எனது மனைவி தலையில் காயமடைந்ததார். அடுத்த நாள் காலை அவரை நாங்கள் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றோம். ஆயினும், அந்தப் பகுதியில் இடம்பெற்ற கடும் சண்டைகள் காரணமாக அவரை மாத்தளனில் இருந்த எனது மாமியார் வீட்டிற்குக் கொண்டு சென்று அங்கு தங்கியிருந்தோம். மறுநாள் எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துசேர்ந்தோம். இராணுவத்தினர் எங்களை கைவேலி பாடசாலைக்கு அழைத்துச் சென்று, என்னையும் காயமடைந்த எனது மனைவியையும் வைத்துக் கொண்டு, எனது குழந்தையை எனது மாமியார் குடும்பத்தினருடன் ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர், எனது மனைவியை சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு ஹெலிக்கொப்டரில் கொண்டு சென்றார்கள். பெயர் விபரங்கள் எதனையும் எடுக்கவில்லை. என்னை ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். நான் எனது மாமியார் குடும்பத்துடன் இணைந்து கொண்டேன். அங்கிருந்து மெனிக்பாம் வலயம் 4 முகாமுக்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டு, கடந்த மாதம் 26ஆம் திகதி எங்களை முகாமில் இருந்து விடுதலை செய்தார்கள். அதன் பின்னர் எனது மனைவியை செட்டிக்குளம், வவுனியா வைத்தியசாலைகளிலும் பூந்தோட்டம் உட்பட பல முகாம்களிலும் புல்மோட்டை, கண்டி, அனுராதபுரம் என பல இடங்களிலும் தேடினோம். ஆனால், எனது மனைவியைக் காணவில்லை. எனவே, எனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். |
| Last Updated on Friday, 06 November 2009 12:29 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...









முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற கடும் சண்டைகளின்போது, பதுங்குகுழியில் பாதுகாப்பிற்காக இருக்கையில் காயமடைந்த தனது மனைவி, இராணுவத்தினரால் சிகிச்சைக்காக
அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பு அவர் இருக்குமிடம் தெரியாததனால், அவரைக் கண்டு பிடிப்பதற்கு அவரது கணவன் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்