விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| முகாம் மக்களின் சுதந்திர நடமாட்ட அனுமதியின் பின்னணி என்ன? |
| Written by Sara |
| Wednesday, 02 December 2009 00:14 |
வவுனியா இடைத்தங்கல் முகாம் மக்கள், நேற்று டிசம்பர் முதலாம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்படுவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது. அதன் படி தமது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்டீன், தெரிவித்துள்ளதுடன், இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 120,000 மக்களே தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.சுதந்திரமாக நடமாடும் இப்புதிய நடைமுறையின் அடிப்படையில் இடம்பெயர் மக்களுக்கு விசேட அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த அனுமதி பத்திரங்களை பயன்படுத்தி உறவுனர் வீடுகளுக்கு சென்று திரும்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அருணாச்சலம், ராமநாதபுரம், கதிர்காமம், மெனிக்பாம் வலயம் 5,6,6E, ஆகிய முகாம்களில் தங்க வைக்கபப்ட்டுள்ள மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரை தமிழ் மக்களிடமிருந்து வந்த கசப்புணர்வை நீக்குவதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவினை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறாவது பெற்றுக்கொள்வதற்குமே ஆளும் மஹிந்த தரப்பு, இத்திடீர் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிபிசி, சீ.என்.என், கார்டியன் உட்பட சர்வதேச பிரபல ஊடங்களிலும் இச்செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா செட்டிக்குளம் முகாமில் இருந்து, இளைஞர், யுவதிகள், சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் இன்னமும் கடத்திச்செல்லப்படும் அவல நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ வாகங்களில் வரும் புலனாய்வுப்பிரிவினர், ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட இளைஞர் யுவதிகளின் பெயர்களை அழைப்பதாகவும், பின்னர் அவர்கள் அவ்வாகனங்களில் ஏற்றி மர்மமான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தெரியவருகிறது. கடந்த சில வாரங்களில் இவ்வாறு கடத்திச்செல்லப்படுபவர்கள் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது. |
| Last Updated on Wednesday, 02 December 2009 00:38 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10


டுவிட்டர் 
வவுனியா இடைத்தங்கல் முகாம் மக்கள், நேற்று டிசம்பர் முதலாம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்படுவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது. அதன் படி தமது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்டீன், தெரிவித்துள்ளதுடன், இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 120,000 மக்களே தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் கருத்துக்கள்