விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஜனாதிபதித் தேர்தல் முடிந்தததும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு - இந்தியாவிடம் இலங்கை உறுதி |
| Written by editor |
| Friday, 11 December 2009 12:17 |
|
இச்சந்திப்பில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விவகாரம், அகதிகளான மக்கள் மீள் குடியேற்றம் மற்றும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் பரவலாக ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டுமென இந்தியத் தரப்பில் வலியுறுத்தியபோது தேர்தல் முடிந்த கையோடு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேவேளை, இலங்கை தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு இந்திய அரசு மேலும் 500 கோடி ரூபாவை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இடம்பெற்ற சந்திப்புக் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில், இந்திய அதிகாரிகள் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் திருப்திகரமாக அமைந்தன. முகாமிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளும் வழங்கப்படும். அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவும் முடியும். இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வைக் காண்பது குறித்து ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் முயற்சிகளை மேற்கொள்வோம். அத்துடன், தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். இது குறித்து நாம் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளோம். மேலும் தற்பொழுது ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேரே அகதி முகாமில் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் வழங்கி வருகிறோம். முகாம்களிலுள்ள தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு இந்தியா உதவி வழங்கி வருகின்றது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதிலேயே இலங்கை கரிசனையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அண்மையில் இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்திய பாராளுமன்றத்தின் மேற்சபையான மாநிலங்கள் அவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பக்க அறிக்கையொன்றை விடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உரையாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்ததுடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை விவகாரம் குறித்து மேலும் இராஜ்ய சபையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படுவதைப் பார்க்க இந்தியா ஆர்வமாக உள்ளது. அந்த நடவடிக்கைகள் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான உரிமைகள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் இவை இடம்பெறுவதையே இந்தியா விரும்புகின்றது. 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லக்கூடிய அர்த்தபுஷ்டியான அதிகார பகிர்வுத் திட்டத்தை இலங்கை முன்வைக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பம். சகலரும் மீள்குடியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசுடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே இலங்கை நிலைவரம் குறித்து இந்திய உயர் மட்ட அதிகாகளிடம் பேச்சு நடத்தும் வகையில் மூவர் அடங்கிய தூதுக்குழு புதுடில்லி வந்ததுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவையும் சந்தித்து உரையாடியது. இச்சந்திப்பில் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முக்கிய ஆலோசனைகளைப் பெறும் வகையில் இலங்கைக்குழுவின் இந்திய விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தன. |
| Last Updated on Friday, 11 December 2009 13:52 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் தமிழர் பிரச்சினை குறித்து அரசியல் ரீதியான தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனவும் இந்தியாவிடம் இலங்கை உறுதியளித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்