பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- தேவாங்கு பக்கங்கள்
- நிர்வாண உண்மைகள்
- தமிழ் நியூஸ் பேப்பர் நெட்
- puratchithamil
- My கதிரவன் கொம்
- vijay
- வழிப்போக்கன் - The Stranger
- தமிழ் பொழுதுபோக்கு
- ஈழநேசன்
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- தமிழ்ப்பள்ளி
- அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அ
- தமிழ் பெஸ்ட்
- தகவல் info
- தியாகி.ரா.கி
- ஆரணி ஜோதிஷ்
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- மதுரைதகவல்ஊடகம்
- hariprasanth
- illamai
இலவச நியூஸ்லெட்டர்..
| தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறுகிறார் கோத்தபாய - மங்கள சமரவீர |
| Written by navan |
| Friday, 11 December 2009 12:30 |
அரசாங்க அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தனது சகோதரருக்காக தேர்தல் சட்ட விதிறைகளை மீறி பிரசாரங்களை முன்னெடுத்து வரும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் ஆணையாளர் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சிமக்கள் பிரிவின் தலைவரும் எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளருமான மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார்.எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரது உறவினர்களுக்கு சேறு பூசும் வகையில் அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். இருப்பினும் அந்த சட்டம் அரச அதிகாரத்தின் கீழ் உள்ளதால் உரிய நியாயம் கிடைப்பதில் சந்தேகமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று பிற்பகல் கொழும்பு றோயல் வீதியில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது: குடும்ப நிர்வாகத்தின் கீழ் சிக்குண்டுள்ள நாட்டை ஜனநாயகத்தின் வழியில் இட்டுச் செல்வதற்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்குமான இரண்டாம் கட்ட நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு சில தினங்களில் தேர்தல் ஆணையாளனால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில் அரசாங்க அதிகாரிகள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறினால் அது தேர்தல் விதிறையை மீறிய செயலாகக் கருதப்படும் என்றும் அந்த சுற்றறிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்புச் செயலாளர், தனது சகோதரருக்கான தேர்தல் பிரசாரங்களை அரச ஊடகங்கள் வாயிலாக முன்னெடுத்து வருகின்றார். அவருடைய இந்த நடவடிக்கைகள் தேர்தல் சட்டவிதிறைகளை மீறியதாகும். இதற்கு எதிராக தேர்தல் ஆணையாளர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்?. வெள்ளை வான் கலாசாரத்துக்கு தலைமை வகித்தவர், அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது இந்த நடவடிக்கை இரகசியமானதொன்றல்ல, அனைவரும் அறிந்த விடயமே என்று அறிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்பதையும் அவர் அந்தப் பேட்டியின் போது சுட்டிக்காட்டியுள்ளார். பிறிதொரு குற்றச் செயலைப் புரிந்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தாமல் மறைத்து வைத்திருக்கும் செயலானது நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியதொன்றாகும். அவர் அவ்வாறானதொரு தகவலை வெளியிட்டுள்ள நிலையிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் இது தொடர்பில் எந்தவொரு வாக்குமூலத்தினையும் பெறவில்லை. விசாரணை நடத்தவும் இல்லை. இதே பிழையை வேறு எவரேனும் செய்திருந்தால் அடுத்த நொடியே அவர்களைத் தேடி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்றிருப்பர். இவ்வாறானதொரு நிலையில் பொலிஸாரிடம் நாம் கேள்வியொன்றை எழுப்புகின்றோம். இத்தகையவருக்கு எதிராக பொலிஸார் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? இதேவேளை பொலிஸ் ஆணைக்குழுவொன்று தேவையில்லை என்றும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அவருடைய இந்தக் கூற்று அரசியலமைப்பை மீறியதாகவே அமைகின்றது. காரணம். பொலிஸ் ஆணைக்குழு என்பது அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயமாகும். இவ்வாறாக தனது சகோதரரின் வாயிலாகப் பெற்றுக் கொண்ட அதிகாரங்களை முறையற்ற வகையில் செயற்படுத்தி வரும் பாதுகாப்பு செயலாளர் குற்றவியல் சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைச் சட்டம் போன்றவற்றை மீறி செயற்பட்டு வருகின்றார். அழிவை நோக்கிக் கொண்டு செல்லும் குடும்ப அரசியலிலிருந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். கேள்வி : ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த போது ஆயுதக் கொள்வனவில் ஊழல் மோசடி செய்துள்ளார் என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளாரே? பதில் : ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர் முதலில் பொறுப்புமிக்கவராக இருத்தல் வேண்டும். இந்த குற்றச்சாட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சேறு பூசும் செயலாகவே கருதப்படுகிறது. அவர் ஆயுதக் கொள்வனவின் போது ஊழல் செய்தார் என்பதற்கோ அல்லது அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களுக்கோ சாட்சியம் இல்லை. இந்த ஆயுதக் கொள்வனவு 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமக்கு இப்போது ஆயுதங்கள் தேவைப்படாது அதற்கு பதிலாக ஆயுதத் தாங்கிகளைப் பெற்றுத் தாருங்கள் என்றே ஜெனரல் சரத் பொன்சேகா குறித்த ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட நிறுவனத்திடம் எழுத்து மூலமாகக் கோரியுள்ளார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குறித்த நிறுவனமே பொறுப்பு கூற வேண்டும். எமக்கு அந்த நிறுவனத்தின் மீதே சந்தேகம் எழுந்தள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று 27ஆம் திகதி பதவியேற்றவுடன் செய்யும் முதல் வேலை இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதேயாகும். |
| Last Updated on Friday, 11 December 2009 12:43 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

அரசாங்க அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தனது சகோதரருக்காக தேர்தல் சட்ட விதிறைகளை மீறி பிரசாரங்களை முன்னெடுத்து வரும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் ஆணையாளர் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சிமக்கள் பிரிவின் தலைவரும் எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளருமான மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார்.
உங்கள் கருத்துக்கள்