சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சரத்பொன்சேகா தேசத்துரோகியெனில் குமரன் பத்மநாதன் தேசாபிமானியா? - ரனில்
Written by editor   
Friday, 18 December 2009 07:40
AddThis Social Bookmark Button

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன் மற்றும் நடேசன் போன்ற புலிகளின் உறுப்பினர்களை பின்னாலிருந்த புலிகளே சுட்டுக்கொன்றிருந்தால் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அப்போதே அதனை உறுதிப்படுத்தியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

வன்னியில் 3 இலட்சம் பேர் உண்ண உணவில்லாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில், அரசாங்கம் குமரன் பத்மநாதனை (கே.பி) பாதுகாப்பு இல்லத்தில் வைத்து உயர் விருந்தளித்து வருகிறது.
தேசத்துரோகிகள் பற்றியும் தேசாபிமானிகள் பற்றியும் பேசும் இவர்கள், குமரன் பத்மநாபனை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை சிறிகொத்தாவில் நேற்று சந்தித்து கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்த நடவடிக்கையில் தனது பணியை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் இன்று தேசத்துரோகியென்று கூறுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாட்டை பார்க்கின்ற போது குமரன் பத்மநாதனை தேசாபிமானியாக்கியுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளினால் தான் அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் எம்டன் இணைந்து கொண்டுள்ளார்கள். பல அமைச்சர்களும் எம்டன் எதிர்காலத்தில் இணைந்து கொள்ளவிருக்கின்றனர்.

நாட்டின் சட்டம் ஒழுங்கும் இன்று சீர்குலைந்துள்ளது. ஊழல் நிறைந்த ஆட்சியே நடக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக நாம் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ளோம்.

ஊழல் நிறைந்த ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எமது பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை நாம் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில், ஜனவரி மாதம் 26ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றி நிச்சயம். இதனை வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் கூடியிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்களின் கரங்களில் காணக்கூடியதாக இருந்தது.

குடும்ப ஆதிக்கத்தினால் எமது நாடு பல்வேறு நட்டங்களை அடைந்துள்ளது. அதனை மாற்றியமைத்து எமது நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 18 December 2009 07:54
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது