விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரை பாதுகாக்கத் தவறிவிட்டார் சரத் - அரசு தரப்பு |
| Written by editor |
| Wednesday, 23 December 2009 08:36 |
|
நாட்டு மக்கள், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சற்று மறந்துவிட்டு, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த நாட்டின் முப்படையினரை பாதுகாக்க அனைவரும் அணிதிரளவேண்டும் என்றும் அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்த விடயங்களை குறிப்பிட்டனர். செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறுகையில், முன்னாள் இராணுவ தளபதியும் மற்றும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் நாட்டின் முப்படையினர் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக முப்படையினர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது. காரணம் இராணுவம் தொடர்பான குற்றச்சாட்டை முன்னாள் இராணுவ தளபதியே முன்வைத்துள்ளார். இதனால் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் 58 ஆம் படைப்பி,வின் அதிகாரிகள் என அனைவருக்கும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களால் இனி இங்கிலாந்துக்கோ சிங்கப்பூருக்கோ தனிப்பட்ட விஜயமாகவோ மருத்துவ தேவைக்காகவோ செல்ல முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. காரணம் நான் 58 ஆம் படைப் பி,வை சேர்ந்தவன் அல்ல என்று அவர்களால் சத்தியகடதாசி கொண்டு செல்ல முடியாது. இராணுவ அதிகாரிகள் தமது பிள்ளைகளுக்கு வைத்தியம் செய்வதற்கும் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இந்த விவகாரத்தை பரிசீலித்து யுத்தக் குற்ற நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்று பணிப்புரை விடுக்கலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஹிட்லரின் இராணுவ அதிகா,களுக்கு எதிராக நியூரன் பேர்க் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதன்போது உயர்மட்டம் தமக்கு அளித்த கட்டளையை தாம் நிறைவேற்றியதாக குறித்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்று கூறி 11 இராணுவ அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறான வரலாறுகள் உள்ளன. இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் அவர்களின் சர்வதேச வலையமைப்பும் இயந்திரம் இன்னும் வலுவாகவே உள்ளன. அவர்கள் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இலங்கைக்கான உதவிகளை தடுத்தல், ஜீ. எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தல் போன்ற விடயங்களை செய்ய பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஐரோப்பிய சந்தையில் எமது பிரவேசத்தை தடுப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. ஏற்கனவே எமக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பல நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டன. ஆனால் அதன்போது நாங்கள் வெற்றிபெற்றோம். ஆனால் அந்த விடயங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம். காரணம் பாரிய சாட்சியாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்று அமைந்துள்ளது. இதனைவிட பலமான சாட்சி இருக்க முடியாது. எனவே இது வரலாற்றில் பா,ய காட்டிக்கொடுப்பு என்று கூறவேண்டும் என்றார். |
| Last Updated on Wednesday, 23 December 2009 09:02 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10


.jpg)
டுவிட்டர் 
எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவம் தொடர்பில் தெரிவித்த கூற்றை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது. இதனால், நாட்டின் முப்படையினர் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளனர். அவர்களால் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்