பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| பிராபகரனைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி, இந்திய அறிவுறுத்தலில் இலங்கை முறியடிப்பு. |
| Written by editor |
| Thursday, 24 December 2009 05:48 |
|
வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, வன்னிக்குள்ளும், வன்னிக்கு வெளியேயும்,அதிர்ச்சியளிக்கக் கூடிய பல விடயங்கள் நடைபெற்றுள்ளன. அவைகுறித்த செய்திகள், அரச தரப்பிலிருந்தும், புலிகள் தரப்பாலும் தற்போது மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியுள்ளன. இவ்வாறு கசியும் செய்திகள் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை மிக்கன என்பதை உறுதி செய்ய முடியாதிருப்பினும், நடந்து முடிந்துள்ள சில விடயங்களின் தொடர்ச்சியை அவதானிக்கும் போது, கசிந்துள்ள செய்திகள் பலவும் பொய்யானவை அல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது. வன்னியில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இருபது நாடுகள் தமக்கு உதவியிருந்ததாகவும், இந்தப் போரில் இந்தியாவின் உதவி அளப்பரியது, நன்றிக்குரியது என்றும் சிறிலங்கா அரசு தரப்பில் ஏற்கனவே வெளிப்படையாகத் பல தடவைகள் அறிவிக்கபட்டுள்ளது. ஆயினும் தற்போது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கும் செய்தி, வன்னிப் போர்க்களத்தில் இந்தியாவின் ஆளுமை எவ்வளவுதூரம் இருந்துது என்பதையும், மேற்குலகமும் ஆசியநாடுகளும் நடத்திய நிழல்யுத்தத்தில் போராளிகளும், பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கும் அதிர்ச்சி தரும் உண்மையும் வெளிப்படுகிறது. விடுதலைப்புலிகளின் இராணுவபலத்தை குறைத்துவிடுவதில், அனைத்துலகமும் ஒருமித்தே இருந்திருக்கின்றன. ஆனால் வி.புலிகளை அழித்து விடவே இந்தியா விரும்பியுள்ளது என்பது தற்போது வெளிவரும் செய்திகளில் தெரிகிறது. வன்னியில் யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்தியாவின் அதி தீவிரமான இந்தப் பொக்கினை விடுதலைப்புலிகள் அறிந்திருந்தார்கள் என்றே தெரிகிறது. அதனாற்தான், இந்தியாவுடன் முறிந்து போன உறவினை பலப்படுத்த முனைந்தார்கள். பிரபாகரனின் சென்ற ஆண்டில் நிகழ்த்திய மாவீர்ர் உரையில், இறுதிக்கட்டங்களில், நடேசன் வெளியிட்ட அறிக்கைகள், என்பவற்றிலிருந்து இதை உணர முடியும். ஆனாலும் இந்தியா தான் கொண்டிருந்த கொள்கையில் எந்தவிதமாற்றத்தினையும் செய்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இறுதிநேரத்தில் அமெரிக்காவின் முயற்சி குறித்துக் கசிந்துள்ள இந்த அவசர நடவடிக்கைகள் தொடர்பாக கசிந்துள்ள அந்தத் தகவல்களின்படி மேலும் அறிகையில், கிளிநொச்சியை கைப்பற்றிய சிறிலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் இறுதிநிலைகளை நோக்கி முன்னகர்ந்த போது விடுதலைப்புலிகள் அமைப்பு பாரிய ஆபத்துக்குள் சிக்கியுள்ளதை பலரும் அறிந்திரந்தார்கள். இதுவிடயம் குறித்து, உடனடியாக நார்வே இணைத்தலைமை நாடுகளுக்கு அறிவித்திருந்தது. மேலும், இந்த இக்கட்டான நிலையில், விடுதலைப்புலிகளின் தலைமையை அங்கிருந்து அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நார்வே வலியுறுத்தியதாகவும் அறிய முடிகிறது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அரசு உயர்மட்டத்தினருடன் நடைபெற்ற பேச்சுக்களில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை உட்பட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை, வெளியேற்றல் நடவடிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகத்தில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இநத் மீட்பு நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய வேலைகளை ஒருங்கமைப்பதற்கு ஹவாயிலிருந்து அமெரிக்க படைஅதிகாரிகள் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைக்கு பொறுப்பான குழுவினர் விசேட விமானத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்து இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானம் சிறிலங்காவிற்கு வருவது குறித்தோ இந்த விமானத்தில் வந்த விசேட குழுவினர் பற்றியோ, சிறிலங்கா அரசிடம் முன்னறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. கட்டுநாயக்கவில் வந்து இறங்கிய பின்னர்தான் சிறிலங்கா அரசுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்வாறு வந்ததன் பின்னர், சிறிலங்கா அரசுக்கும் தமது திட்டம் குறித்து கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ ப்ளாக் எடுத்துக்கூறியதோடு, தமது நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர், குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்றும் அமெரிக்க தரப்பினரால் சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறப்பட்டதாம். இந்தத் திட்டத்தின் படி, மீட்கப்படும் விடுதலைப்புலிகள் அனைவரும் முல்லைத்தீவு கடற்பரப்புக்கு கொண்டுவரப்படும் அமெரிக்க கப்பலுக்கு அழைத்துவரப்படவும், பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் வெளியேற்றவும், அமெரிக்காவின் திட்டமிட்டிருந்தது. இதற்கு ஏதுவாக கடற்பரப்பை அண்டிய பகுதியில் தாக்குதல்களை முற்றாக நிறுத்தும்படி கோரப்பட்டதாகவும் தெரியவருகிறது. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பல வன்னிச் சமரில் பாவிக்கப்ட்டதாகவும் , குறிப்பிட்ட ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் வி.புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் இத்தகைய ஆயுதப்பிரயோகத்தில் பலியானதாகவும், போர்காலத்தில் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Thursday, 24 December 2009 07:24 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

வன்னியில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது, சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகைக்குள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் இருந்தபோது, பிரபாகரன் உட்பட குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களை, அங்கிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா முயற்சியினை மேற்கொண்டதாகவும்,
உங்கள் கருத்துக்கள்
அந்த இடத்தில் நடந்திருக்க கூடியது என்னவாக இருந்திருக்கும்?
1.உடனடியாக அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.
2. எங்கே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கிடக்கும் "விமல் வீரவன்ச" போன்ற அடிவருடி அரசியல்வாதிகள், உடனடியாக ஊரெங்கும் பறைசாற்றியிருப்பார்கள்.
""அமெரிக்கப்புலி கொழும்பில் வந்து நிற்கின்றது.... அனைவரும் திரண்டு வருக,... இவர்களை அழித்திடுக.,...
என்று கவிதை பாடியிருப்பார்கள்.
இந்த கோணத்தில் நாம் நோக்கும் போது , புலிகளைக் காப்பாற்றவென அமெரிக்காவின் வருகையும், இலங்கை அரசிடம் அனுமதி கேட்டதும் பொய்யான தகவலாக இருக்க வாய்ப்புள்ள அதே வேளை, சரத் பொசேகாவை மெற்கோள் காட்டி, வெளியிடப் பட்ட, போர் ரகசியம் , தற்போது, சரத் பொன்சேகா வாயை மூடிக் கொண்டு இருக்கும் அதே வேளை, ஆளும் தரப்பினர் பலரும் தங்களுக்கு ஏற்றவாறு, "சரத் பொன்சேகா போர் பற்றிய ரகசியத்தைக் கூறி, நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார், என்றுஅறிக்கைகளும் கண்டனங்களும் தெரிவிப்பதன் மூலம், இறுதி யுத்தத்தின்போது அங்கு நடந்த நடந்த உண்மை என்ன என்பதனை தங்களது வாய் அறிக்கை மூலமாக பல அமைச்சர்களும், நாடாளுமண்ற உறுப்பினர்களும் உலகிற்கு வெளிப் படுத்தி வருகிறார்கள், இதன் மூலம் மக்கள் இந்த அரசின் கொடூரமான போக்கினை உணர்ந்து கொள்வார்கள் என் நம்புகின்றேன்.