பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

புதிய ஆண்டிலும் விடுதலை பயணத்தில் முன்னேறி சென்றிடுவோம் - வி.உருத்திரகுமாரன்
Written by Sara   
Friday, 01 January 2010 22:02
AddThis Social Bookmark Button

தெற்காசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு, பிறந்துள்ள புதிய ஆண்டு 2010 லும் அதற்கப்பாலும் நமது விடுதலை பயணத்தில் முன்னேறி சென்றிடுவோம் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்க செயற்குழுவின் தலைவர் வி.உருத்திரகுமாரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்

புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றன. கடந்த தசாப்தங்களில் சிறிலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்து உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடி வைக்கின்றனர்.

2000 ஆம் ஆண்டில் கடந்த தசாப்தம் ஆரம்பித்த போது தமிழ் மக்கள் அதை சமாதானம் குறித்த நம்பிக்கையுடன் தான் எதிர்கொண்டனர். தமிழ் மக்களின் நியாயத்துடன்கூடிய சமாதானம் குறித்த நம்பிக்கை அடுத்த சில ஆண்டுகளிலேயே கருகிப் போனது. 2009 ஆம் ஆண்டில் தமிழர் தேசத்தின் வரலாற்றில் ஒருபோதும் எதிர்கொள்ளாத அளவு கொடுPரங்களை சிங்கள அரசின் கொடிய கரங்களால் நாம் எதிர்கொண்டோம்.

தற்போது புதிய தசாப்தத்தில் காலடி வைக்கும் இவ்வேளையில் இனிவரப்போகும் ஆண்டுகளை புதிய நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்வோம். 2010 இல் ஆரம்பமாகும் இப்புதிய தசாப்தத்தின்போது தமிழ் மக்கள் தமக்குரித்தான உரிமைகளை அனைத்து வகையான சனநாயக வழிமுறைகளூடாகவும் வென்றெடுக்கவென மீளவும் உயிர்த்தெழுவார்களென்பதில் ஐயமெதுவுமில்லை.

சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை உருவாக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின்பின் நாமெல்லாம் ஒருமித்து நிற்கின்றோம். இதேவேளையில் இவ் அரசியல் அபிலாசைக்காக குரல் கொடுப்பதற்கோ அல்லது செயற்படுவதற்கோ தற்போது சிறீலங்காவில் எவ்வித அரசியல் வெளிகளுமேயில்லை என்பதை நாமறிவோம். அதனாற் தான்; நாம் இவ் வருடம்

அமைக்கத் திட்டமிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை நிறுவவும் தமக்கேயுரித்தான இறைமையை நிலைநாட்டுவதற்குமான அரசியல் வெளியை இலங்கைத்தீவில் உருவாக்க உழைக்குமென்பதையும் நாம் திடமாக நம்புகிறோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டவாறு - நமது தேசத்தை மீள்நிர்மாணம் செய்யும் முயற்சியில் நமது தேசத்தின் அறிவு பொருள் மற்றும் நிதிசார் அனைத்து வளங்களையும் தேசத்தின் சேவைக்காக ஒருங்கிணைக்கும் வகையில் நம்முடன் அணிதிரளுமாறும் புதிய தசாப்தத்தில் நமது விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த எம்முடன் கைகோர்த்து நிற்குமாறும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். உங்கள் அனைவரிதும் ஆதரவுடனும் பங்களிப்புடனும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழரினது அதிகார மையமாக வலுப்பெறும்.

அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களுடன் உரிய முறையில் தொடர்புகளைப் பேணி யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட நமது மக்களது வாழ்வை மீள் நிர்மாணம் செய்ய உழைப்பதே நமது உடனடி இலக்காகும். யுத்தத்தின்போது நமது மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு போன்றவைக்கெதிராக நீதி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம.; வகைகூறும்நிலையென்பது நிலையான சமாதானத்தின் இன்றியமையாத ஒரு அம்சமாகும்.

அதுபோலவே அனைத்துலக சமூகத்தின் செயலறுநிலை பன்னாட்டு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதோடு சட்டங்களுக்கமைந்த ஆட்சி என்ற கோட்பாட்டினையும் கேலிக்குரியதாக்கிவிடும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான மதியுரைக்குழுவின் அறிக்கையினை வெளியிட இருக்கிறோமென்பதனை இத் தருணத்தில் மகிழ்வுடன் அறியத் தருகிறோம். வெளியீட்டினைத் தொடர்ந்து ஒரு குறுகிய காலத்துக்கு இவ்வறிக்கை மக்கள் மத்தியிலான கருத்துப்பரிமாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.

2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் இந்தப் பிரபஞ்சம் மானிட முயற்சிகள; அனைத்துலக உறவுகள் எல்லாமே தர்மத்தின் சக்கரத்தில் சுழலும் காலம் என்றோ வரும் எனக் கூறியிருந்தார். கலாநிதி மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளில் இதனைக் கூறுவதாயின் ”தர்மத்தின் அடிப்படையிலமைந்த பிரபஞ்சத்தின் அச்சு நீளமானதென்றாலும் அது நீதியின் பக்கமே வளையும்”.;

தெற்காசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலையும்; கவனத்திற்கொண்டு தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைத்திட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் முனைப்புடன் செயற்படும். புதிய ஆண்டிலும் அதற்கப்பாலும் நாம் நமது விடுதலைப் பயணத்தில் முன்னேறிச் சென்றிடுவோம் என்ற நம்பிக்கையோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்க முயற்சியின் இணைப்பாளர் என்றவகையில் தமிழரனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

மேலதிக விபரங்களுக்கு: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

இவண்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு 

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 01 January 2010 22:32
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது