பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழகத்திற்கு தொடர்ந்து இடம்பெயரும் இலங்கைத் தமிழ் அகதிகள்!
Written by Sara   
Monday, 04 January 2010 12:50
AddThis Social Bookmark Button
போர் முடிந்து விட்ட பின்னரும், இடைத்தங்கல் முகாம்களில் அல்லலுறும் தமிழர்களின் வாழ்வும், வறுமையும், தாயகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கான இடப்பெயர்வுகளை அதிகரித்துக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் இப்போது வறுமைதான் பிரதானமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் என்று தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் கூறியுள்ளனர். போர் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம், இனி வடக்கில் வசந்தம் என்று ராஜபக்ஷ அரசு கூறியது. ஆனால் தமிழர்கள் தொடர்ந்து அகதிகளாக பல் வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து வருவது நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்..

இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கும் பிற நாடுகளுக்கும் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அதேபோல தமிழகத்திற்கும் அகதிகள் வருகை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவன், ஒரு சிறுமி ஆகிய 5 பேர் குந்தராயர் சத்திரம் அச்சனை கடற் கரைக்கு அகதிகளாக வந்திறங்கிருந்த போது தகவல் அறிந்ததும் கடலோர பொலிஸார் மற்றும் தனிப் பிரிவு பொலிஸார் அவர்களை தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த ராஜ்குமார் (60), வினிதா (30), அவரது மகன்கள் சவசியான் (11), எமிசன் (5), மகள் நீராவினி (9) என்று தெரியவந்தது. அவர்களது பெயரை பதிவு செய்த பொலிஸார் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு வினிதா செய்தியாளர்களிடம் ஈழ நிலைவரம் குறித்துக் கூறுகையில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்கு வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுகிறார்கள். கிளிநொச்சியை சேர்ந்த நானும், எனது குழந்தைகளும் பல்வேறு போராட்டங்களை கடந்து இங்கு வந்துள்ளோன். 2 ஆண்டுகளுக்கு முன்பே எனது கணவர் தமிழகம் வந்து விட்டார்.

இலங்கையில் கடைசியாக நடந்த சண்டையின்போது கிளிநொச்சியில் இருந்து ஒக்கனை பகுதிக்கு நான் குழந்தையுடன் வந்து கொண்டி ருந்தேன். அப்போது இராணுவத்தினர் எங்களைப் பிடித்து அங்குள்ள முகாமில் 2 மாதங்களாக அடைத்து வைத்திருந்தனர். அங்கு எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்பட வில்லை.

பின்னர் எங்களை வவுனியா மாவட்டத்தில் உள்ள இலுப்பை முகாக்கு மாற்றினர். 2 மாதத்திற்கு முன்பு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். தலைமன்னாரில் இருந்து உறவினர் ராஜ்குமார் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை விற்று படகு கட்டணமாக கொடுத்து இங்கு வந்து சேர்ந்தோம். இலங்கையில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2009 டிசம்பர் 31 வரை இந்த 5 பேரையும் சேர்த்து மொத்தம் 24 ஆயிரத்து 300 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளதாகவும் இதில் 3,500 பேர் மண்டபம் முகாமிலும் மற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 130 முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 04 January 2010 12:55
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது