சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இந்திய அழுத்தங்களையும் மீறி, போரில் உறுதியாக இருந்தார் மஹிந்த - கோத்தபாய ராஜபக்ஷ
Written by editor   
Tuesday, 05 January 2010 03:32
AddThis Social Bookmark Button

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிராக இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போரை முன்னெடுப்பதான தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். அதற்கான தெளிவுபடுத்தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கினார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். 

இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு அதிகரிக்கப்பட்டமையே இராணுவ வெற்றியின் மிக முக்கியமான காரணம் என சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், பயங்கரவாதிகள் தந்திரோபாயமாகப் பின்வாங்கி, மீண்டும் திடீரென படையினர் மீதான தாக்குதல்களை முன்னெடுப்பதற்ககான சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த போதிலும், படையினரின் பலம் அவர்களின் சூழ்ச்சியினைத் தகர்த்தெறிந்தது என்றும் அவர் சொன்னார்.

நேற்று மாலை கொழும்பு  ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது: நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதம் காரணமாக பாரியளவான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பயங்கரவாதம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டை பொருளாதார அபிவிருத்தியை நோக்கிக் கொண்டுசெல்ல கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை, கீழ் மட்டத்திலிருந்தே ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளது. அதற்கு தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நாம் எமது தொழில்நுட்ப அறிவை கடந்த 4 வருடங்களாகப் பயன்படுத்தினோம். அதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பைத் துரிதப்படுத்தி, தேசிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். போர்க் காலத்தின் போது, களத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொழில்நுட்பத்தைக் கொண்டே பார்வையிட்டதுடன், அதன் மூலம் அவற்றை எதிர்கொள்ளக் கூடிய ஆலோசனைகளை நாம் உடனுக்குடன் வழங்கினோம்.

புலிகள், பொது மக்கள் மீது பிரயோகித்த அழுத்தங்களைக் கண்டறிந்து, அவர்களை அங்கிருந்து மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். தேர்தலை முன்னிட்டு, நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஆறு வருடங்களுக்கான திட்டமிடல் ஆவணம் ஒன்று அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

சமாதானத்தை மையப்படுத்திய அபிவிருத்தி நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. பயங்கரவாதத்தால் அழிவுற்றவற்றை மீளக்கட்டியெழுப்பும் வகையில் இந்த அபிவிருத்தித் திட்டம் அமைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, அவற்றைத் தடுத்துநிறுத்துமாறு இந்தியா, ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிப்பதை ஏற்கவும் நாம் தயாராக இருந்தோம்.

இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவ நடவடிக்கைகளை மட்டுமே நம்பியிருந்தனர். படையினருக்கு எதிரான போரை முன்னெடுத்து, அதன்மூலம் வெற்றி காண்பதற்கு மட்டுமே அவர்கள் எத்தனித்தனர்.

இந் நிலைமையில், ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தார். நாட்டையும், நாட்டு மக்களையும், படையினரையும் காப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகவும், அதற்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யப்போவதாகவும் அவர் இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்தார். அவ்வாறே இராணுவ நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன் அவற்றில் வெற்றியும் காணப்பட்டன.

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 05 January 2010 03:50
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது