சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

புரட்சி நடக்க நல்ல தலைவர்கள் தேவை - தொல். திருவமாவளவன் !
Written by editor   
Thursday, 07 January 2010 11:06
AddThis Social Bookmark Button

தமிழ் சமூகத்தில் புரட்சி நடக்க வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது உங்களுடைய கடமையாகும். அந்த வரலாற்று கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.

சென்னையில் 5/1/2010 அன்று மாலை 6 மணியளவில் அண்ணா அரங்கத்தில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து முதல் பாகமாக 'தொல்.திருமாவளவன் கவிதைகள்' என்னும் பெயரில் நூல் வெளியீடபட்டது.

விழாவிற்கு கவிஞர் என்.குலாப் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வன்னி அரசு வரவேற்றார்.

விழா இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தியதாவது

ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் நெருக்கடியினால் எனக்கு எழுந்த உணர்வுகளை சொற்களாக்கி எழுதினேன். அதைத் தான் நண்பர்கள் தொகுத்து கவிதை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.

கல்லூரியில் நான் படிக்கும் காலத்திலேயே விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஆதரித்து கவிதைகள் எழுதியுள்ளேன்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலை களத்தில் நின்று போராடி வருகிறேன். என் மீது வீண்பழி சுமத்துவோர், வீணான விமர்சனம் செய்வோர் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.

தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகவே திமுக காங்கிரஸ் அணியில் இடம் பெற்றுள்ளேன். அந்த அணியில் இருந்தாலும் என்னுடைய கொள்கை லட்சியத்திலிருந்து ஒரு போதும் மாறமாட்டேன்.

குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போதும், அந்த கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கை தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளது என்று நாடாளுமன்றத்திலேயே நான் குற்றம் சுமத்தினேன்.

தலித் மக்களின் விடுதலைக் காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன். தனி தமிழீழம் அமையும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தமிழகத்தில் விடுதலை புலிகளாகவே செயல்படுவோம் , ஈழத்தை யாரும் ஆதரித்தாலும் ,ஆதரிக்காமல் போனாலும் விடுதலைச்சிறுத்தைகள்அடுத்தகட்ட போரை மேதகு.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுத்துசெல்லும் எனக் குறிப்பிட்டடார்.

கடந்த தேர்தலின் போது, தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி ஒரு தனி அணி அமைப்போம் என்று முயற்சித்தேன். ஆனால் அதற்கு என்ககு உரிய பலன் கிடைக்கவில்லை.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 07 January 2010 11:14
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது