விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யா நன் தா உமது லிலை கல் வெலிய வந்து விட்டது இனி உமது பாட்சா ப...
சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.!!..புதிய சட்டமன்றத் திறப்பு விழாவையொட்டி கலைஞர் மற்றும்
சோனியாவ
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக
...
இலவச நியூஸ்லெட்டர்..
| திமிறினார் சரத் பொன்சேகா, பதறினர் பாராளுமன்ற உறுப்பினர், கைதின்போது பரபரப்பு! |
| Written by editor |
| Tuesday, 09 February 2010 04:47 |
|
"முன்னாள் இராணுவத்தளபதி ஒருவரை, நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டுக் கொண்டு சென்றது சிறிலங்கா இராணுவம்." என , சரத் பொன்சேகாவின் கைதினை நேரில் பார்த்த பாராளுமன்ற உ றுப்பினர் ஒருவர் அதிர்ச்சி மாறாத நிலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் போரியல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணையில், தனக்குத் தெரிந்த உண்மைகள், தான் கேள்விப்பட்ட விடயங்கள், அனைத்தையும் சாட்சியப்படுத்தப் போவதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் இராணுவத் தளபதிநேற்றுத் தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்திருந்த சிலமணிநேரங்களில், அவரது அலுவலகத்தில் புகுந்த இராணுவத்தினரால் இந்தக் கைது இடம் பெற்றிருக்கிறது. இக் கைது முயற்சி நடைபெற்ற வேளையில், சரத் பொன்சேகாவுடன், எதிர்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராணுமன்ற உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. "இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது. முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரின் கைதின் போதே இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள இராணுவம், தமிழ் மக்களைப் பயங்கரவாதிகளாகக் கைது செய்யும் போது எப்படி நடந்திருப்பார்கள் என்பதை உணரமுடிகிறது" என மதற்றுமொரு உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச்செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர். நாங்கள் கைதினைத் தடுக்க முயற்சித் போதும், இராணுவத்தினரை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையே அங்கு காணப்பட்டது" எனத் தெரிவித்தார். பொன்சேகா கைது செய்யப்பட்ட சமயம், அவரது அலுவலகத்தில், பாராணுமன்ற உறுப்பினர்களான, மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ ஆகியோர் பொன்சேகாவுடன் உரையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பொன்சேகா கைது செய்யப்பட்ட பின்னரும், சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக அவர்கள் அங்கிருந்து வெளியேற இராணுவத்தினர் வெளியேற அனுமதிக்கவில்லை என,அறியப்படுகிறது. இராணுவக் குற்றங்கள் தொடர்பில் சரத் பொன் சேகா கைது செய்யப்பட்டிருப்பதாக, சிறிலங்காவின் புதிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள்காட்டி, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்க, ஆகியோர் நாட்டில் இல்லாதபோது நடைபெற்றிருக்கும் இந்த முக்கிய கைதுச் சம்பவம், சிறிலங்காவின் உள்ளக அரசியல் நகர்வுகளில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயக அரசியல் போர்வையில், இராணுவ சர்வாதிகார ஆட்சியொன்றை நோக்கி, சிறிலங்காவின் அரசியல் நகர்ந்துவருகிறதா என அச்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே சமயம் நாட்டின் உண்மைநிலைகள் குறித்து அறியத்தக் கூடிய செய்தியாளர்கள் பலர் அச்சமடைந்த நிலையில் மெளனமாகி வருவதாகவும், மேலும் பலர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் தெரியவருகிறது.
|
| Last Updated on Tuesday, 09 February 2010 05:34 |
- பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!


டுவிட்டர் 
" எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் உட் புகுந்தனர். எந்திவித உரையாடலுமின்றி, உடனடியாகவே ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர்."
உங்கள் கருத்துக்கள்
தமிழனினத்தின் சாபம் ஒழியடும் தமிழ் விரோதி