சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 1000 பேர் சென்னையில் கைது.
Written by editor   
Sunday, 06 December 2009 12:34
AddThis Social Bookmark Button

டிசம்பர் 6 இந்தியாவில் பரபரப்புக்கும் அச்சத்துக்கும் உரிய ஒரு நாளாகிப்போனது.  இதற்கக் காரணமான சம்பவமாகிய பாபர் மசூதி இடிப்பு குறித்து  விசாரணை மேற்கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கை, இந்திய நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வருடம் டிசம்பர் 6 குறித்து அதிகளவு அச்சமும், வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  இந்நிலையில்,  இன்று அதனையொட்டி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதிலும் ஆர்பாட்டங்கள் கண்டன நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல்களின் போது சுமார்  1000 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலும் அறிகையில், இடிக்கப்பட்ட பாபர் மசூதி மீளவும்  கட்டித்தர வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினசார்பில் பலர் அவரது வீடு அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் ரோட்டுக்கு வந்தனர். ஆயினும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்பகுதி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பர்டுகள் செய்யப்பட்டிருந்தன. அப்பகுதியை சேராத புதியவர்கள் எவரும் அப்பகுதிக்குள் செ்ல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி கொடுக்கபட்ட பிறிதொரு பகுதியில் மேற்படி அமைப்பினர் திரண்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இது போலவே  அண்ணாசாலைப் பகுதியில்,  அண்ணா சிலை முன்பாக  தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன நடந்ததாகவும்,   கவர்னர் மாளிகையை முற்று கையிட சென்ற நூற்றுக் கணக்கான இந்திய ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழக உறுப்பினர்கள்,  சைதாப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 06 December 2009 12:57
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது