விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தினகரன் ஊழியர்கள் எரிப்பு வழக்கு திமுக -வினர் விடுதலை ! |
| Written by editor |
| Thursday, 10 December 2009 08:40 |
|
இதனையடுத்து, கடந்த 9.5.2007 அன்று , திமுக -வின் முக்கிய நிர்வாகிகளும் , மு.க.அழகிரி ஆதரவாளர்களும், மதுரை உத்தங்குடியில் உள்ள தினகன் நாளிதழ் அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர். இந்த தாக்குதலில் தினகரன் ஊழியர்களான பொறியாளர்கள் கோபிநாதன், வினோத் குமார், காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் என கலாநிதி மாறன் சபதம் செய்தார். இதனால் திமுக -வுக்கும், மாறன் சகோதரர்களுக்கும் மோதல் வெடித்தது இந்த நிலையில் மாறன் சகோதரர்களுக்குப் போட்டியாக மு.க.அழகிரி, ராயல் கேபிள் டி.வியைத் துவக்கினார். இதனால் அறிவாலயத்தில் செயல்பட்ட சன் டி.வி. அலுவலகத்தை காலி செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டது. மேலும், சன் டி.வி. சார்பாக தயாரிக்கப் பட்ட படம் மதுரையில் ஓடவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக் கப்பட்டதில் 3 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் , பத்திரிக்கையாளர்கள் சங்கங்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் 19.5.2007 அன்று அறிவித்தார். இந்த ்சம்பவம் தொடர்பாக திமுகவைச் அட்டாக் பாண்டி, திருச்செல்வம், பிரபு, சரவண முத்து, முருகன், விஜயபாண்டி, கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ராமையாபாண்டி, வழி விட்டான், சாலைமுத்து, சுதாகர்,ரமேஷ்குமார், திருமுருகன் (எ) காட்டுவாசி, ரூபன், மாலிக்பாட்சா மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதி மன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நடை பெற்று வந்த தினகரன் நாளி தழ் தாக்கப்பட்ட வழக்கில் 85 சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிலர் பிறழ்சாட்சியளித்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ரத்தினராஜ் உத்தரவிட்டார். தற்போது திமுக - சார்பில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது. |
| Last Updated on Thursday, 10 December 2009 08:48 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
மதுரை-யில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று திமுக ஆதரவு நாளேடான தினகரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது.
உங்கள் கருத்துக்கள்