சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சிதம்பரம் எங்களை மீண்டும் ஏமாற்றி விட்டார் - தெலுங்கானா ராவ்
Written by editor   
Thursday, 24 December 2009 10:50
AddThis Social Bookmark Button

மத்திய அரசுக்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  மீண்டும் ஒருமுறை எங்களுக்கு துரோகம் செய்து விட்டார் என, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு,  மத்திய அரசு மேற்கொண்டு வரும்  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே. சந்திரசேகரராவ், நடிகை விஜயசாந்தி, உட்பட  தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏக்கள் 82 பேரும் ராஜினாமா செய்ய  தீர்மானித்துள்ளதாகக் தெரிவிக்கபடுகிறது.

ராவ் தனது ராஜினாமாக் கடிதத்தை ஏற்கனவே மக்களவைச் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ள 82 எம்.எல்.ஏக்களும்,  ராஜினாமா கடிதங்களைக் கொடுக்கவுள்ளதாக அறியப்படுகிறது. இதனால் ஆந்திராவில் பலத்த அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ராஜினாமாக்கள் தொடர்பாகவும், மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும்,  ராவ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றபோது, காங்கிரஸ்  தெலுங்கானா பகுதியிலுள்ள காங்கிரஸ்கட்சித் தலைவர்கள் உட்பட  அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம்  கருத்துத் தெரிவித்த ராவ்,  இந்தப் பிரச்சனை தொடர்பில் மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறின்,  சாதாரண பஞ்சாயத்து உறுப்பினர் முதல் எம்.பி. வரை அனைவரும் ராஜினாமா செய்வோம எனவும், தெலுங்கானா முழுவதும் 48 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மேலும்.  மத்திய அரசு சார்பில் அறிவிப்புச் செய்த உள்துறை அமைச்சர்,  ப.சிதம்பரம் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு துரோகம் செய்து விட்டார் எனவும் குறிப்பிட்டார். தெலுங்கானாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டாக இணைந்து செயற்பட எண்ணியுள்ளோம்.  இதற்காக  கூட்டு நடவடிக்கைக் குழுவை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதன் பின்னர் மொத்தமாக அனைவரும் ராஜினாமா  செய்யும் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும்,  தெலுங்கானாவை அடையும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளதாகச் செய்திகள்  தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 24 December 2009 11:34
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது