விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இலவச நியூஸ்லெட்டர்..
| 'தமிழீழம்' வெறும் கனவு - தங்கபாலு, பிரபாகரன் வருவார் என்பது ஏமாற்று - இளங்கோவன் |
| Written by editor |
| Tuesday, 05 January 2010 09:10 |
|
இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீதும், மதிமக செயலர் வை.கோ மீதும், கடுமையான விமர்சனங்களை வைத்து உரையாற்றினார்எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உரையில், " தன் பின்னால் உள்ள இளைஞர்களை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் திருமாவளவன் பயன்படுத்த வேண்டுமே தவிர தவறான வழிக்கு அவர்களை இட்டுச்செல்லக் கூடாது." எனக் குறிப்பிட்டார். மதிமுக செயலாளர் குறித்துத் தெரிவிக்கையில், "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், வருவார் எனத் தானும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்ற நினைக்கிறார் வை.கோ. இல்லாத ஒருவரை இருப்பதாக மாயம் செய்து கொண்டிருக்கிறார். யாரை எதிர்த்து கட்சி தொடங்கினீர்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைத்தீர்கள். பின் சிறையில் தள்ளியவர்களுடனேயே கூட்டணி வைத்தீர்கள். உங்கள் அணி மாறுதல் என்பது என்ன கொள்கை ? " எனக்குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில், "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் அவ்வாறு பேசுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கருணாநிதி தயங்குகிறார். தி.மு.க.வும், காங்கிரசும் கொள்கை ரீதியாக எதிரெதிர் கட்சிகளாக இருக்கலாம் ஆனால், காங்கிரஸ் கட்சி கூட்டணி தர்மத்தை பாதுகாக்கும் கட்சி. தி.மு.க. அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். ஆகவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது முதலமைச்சர் கருணாநிதி தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழமை கட்சி என்ற பெயரில் வேட்டு வைக்க காத்திருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக, பிரபாகரன் படத்தை வைக்க முதல்வர் அனுமதிக்க கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல" என்றார். தொடர்ந்து பேசுகையில், "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கடந்த 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இங்கு மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளில் குறைவின்றியே காணப்படுகின்றன. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள். இலங்கையில் நடந்த கொடுமைகளை போல் தமிழகத்திலும் நடக்க வேண்டுமென விரும்புகின்றார்கள். அதை நாம் தடுத்தாக வேண்டும். தனித் தமிழ் ஈழம் மலரும் என இங்கு சிலர் தொடர்ந்து கூறி மக்களை ஏமாற்ற அவர்கள் முயல்கின்றனர். தனித் தமிழ ஈழம் என்பது வெறும் மாயை " எனத் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். |
| Last Updated on Tuesday, 05 January 2010 10:08 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
உங்கள் கருத்துக்கள்
ஜனா