பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சிக்கன்குனியா, டெங்கு காச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்த தமிழக முதல்வர் உத்தரவு!
Written by editor   
Thursday, 07 January 2010 10:12
AddThis Social Bookmark Button

தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சிக்குன் குனியா, லெப்டோஸ்பைரோஸிஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய காய்ச்சல்களை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிடுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.   

முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உத்தரவிற்கிணங்க   துணை முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக காணப்படும் காய்ச்சல் பற்றியும், நோய்களுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணியினை தீவிரப்படுத்துவது குறித்தும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் 2006ஆம் ஆண்டில் சிக்குன் குனியா காய்ச்சலினால் 64 ஆயிரத்து 802 நபர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டில் 47 ஆகவும், 2008ஆம் ஆண்டில் 71 ஆகவும் குறைந்துள்ளது.   

தென்மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர், மேளப்பாளையம் போன்ற பகுதிகளில் சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பவர்கள், இந்தக் காய்ச்சல் தொற்றோடு வந்ததாகவும், இதனால் இப்பகுதிகளில் இக்காய்ச்சல் பரவியிருப்பதாகவும், ஜப்பானிய மூளைச்காய்ச்சல் உள்ள திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தடுப்பூசி போடப்பட்டுவருவதால் இந்நோயின் தாக்கம் குறைந்திருப்பதாகவும் மருத்துவத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தனர்.   

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாவது:  
 

“மலேரியா, டெங்கு, லெப்டோஸ்பைரோஸிஸ், ஸ்வைன்ப்ளூ, யானைக்கால் நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்;  பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும்; அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்; இந்நோய்களுக்கு காரணமான கொசுவை ஒழிப்பதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்;  இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள , 850  பணியாளர்களின்  நியமனத்தை மேலும் நீட்டித்து கொசுப்புகை மருந்து அடிக்கும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும்;  மாவட்டத்தில் ஒரு   ஒன்றியத்தை  தேர்ந்தெடுத்து, அந்த ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் சுகாதாரத்துறை பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோரை ஒருங்கிணைத்து தீவிர கொசு ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்;  இத்திட்டம் சிறப்பான பலனைத் தந்தால், இத்திட்டத்தை மற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கும் விரிவுப்படுத்தி செயல்படுத்த வேண்டும்;  இத்திட்டத்தை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொசுவினால் பரவக்கூடிய அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.       

      

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 07 January 2010 10:43
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது