பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| நாமக்கல்லில் நல்லதொரு கலெக்டர் ! |
| Written by editor |
| Monday, 21 December 2009 17:26 |
|
கடந்த 12 - 10 -2009 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாமில் , இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இது வரை செய்ய முடியாத ஒரு காரியத்தை மிக அமைதியாக செய்து முடித்துள்ள அவர் ஒரு தமிழன். "மகா ஜனங்களே ! நான் சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள். என்னிடம் உள்ள சொத்தின் மதிப்பு இவ்வாளவு தான். இந்தத் தொகையிலிருந்து, எனது சொத்து மதிப்பு உயரவும் வாய்ப்பில்லை. குறையவும் வாய்ப்பில்லை என சூசகமாக சொல்லியுள்ளார். இப்படிச் சொன்ன நாமக்கல் மாவட்ட கலெக்டர் வங்கிக் கணக்கில் இருந்த இருப்புத் தொகை ரூ. 7172 .
அவருக்குள்ள அசையாச் சொத்து என்னவென்று பார்த்தால் பெரிய மாட மாளிகையோ அல்லது பங்களாவோ இல்லை. மதுரை அருகே பாஸ்டின் நகரில் இரண்டு சென்ட்டில் வீடு மட்டுமே உள்ளது. இதன் இன்றைய மதிப்பீடு சுமார் 9 லட்சம் மட்டுமே. இப்படி , தனது சொத்து கணக்கை பகிரங்கமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும், அரசியல்வாதிகளுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ள நாமக்கல் கலெக்டரின் பெயர் சகாயம். அவரது தந்தையார் பெயர் உபகாரம் பிள்ளை. தமிழகத்தில் இப்படி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியா உண்டா என பலருக்கும் ஆச்சர்யம். பிளஸ் அதிர்ச்சி. ஆம், உண்மைதான். இந்தியாவிலேய தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வண்ணமும், வருங்கால சந்ததியினர் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்பதனை, சுட்டிக் காட்டத் தக்க வகையில், உதாரபுருஷனகா திகழ்கின்றார் கலெக்டர் சகாயம் அவர்கள். இவர் பெயரில் தான் சகாயம் உள்ளதே தவிர எந்த ஒரு அரசியல்வாதி-க்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி இது வரை இவர் சகாயம் காட்டியதே இல்லை என்று சொல்லலாம். ஊழல் பேர்வழிகளை அடையாளம் கண்டு அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பதில் சகாயம் கில்லாடி. மேலும் முறைகேடுகளுக்கு எதிராக மிகத் துணிச்சாக போராடும் இளம் வாலிபர். இவர் தமிழக அரசு பதவியில் பணியாற்றிய போது மணல் கொள்ளையர்கள், குளிர்பானக் கம்பெனியின் மோசடிகள், ஹோட்டல்களில் நடைபெறும் முறைகேடுகள், காஸ் டீலர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கடுமையாகவும், துணிச்சலாகவும், இடைவிடாமலும் போராடி வெற்றிகளை குவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் இவர் பணியில் இருந்த போது, பாலாற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை நடந்தது. இதனால் வெகுண்டு எழுந்த சகாயம் மணல் கொள்ளையர்களை எதிர்த்து கடுமையாக சாட்டை சுழற்றினார். அதற்காக இவருக்கு கிடைத்த பரிசு தாக்குதல் மட்டுமே . அதையும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு தனது கடமையில் இருந்து சற்றும் ஓடிவிடவில்லை. ஓய்ந்துவில்லை. 1999 ம் ஆண்டு, மிகப் பெரிய பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்ஸி தனது குளிர்பானங்களை மிக மோசமான தரத்துடன் தனது தயாரிப்பை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வந்தது. அதை கண்டறித சகாயம் துடிதுடித்து போய் அந்த குளிர்பானத் தயாரிப்பு நிறுவன பிரிவை மூட அதிரடியாக உத்தரவிட்டார். இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுகள் கொலை மிரட்டல்கள். ஆனாலும் அசராமல் தனது முடிவில் இருந்து இவர் மாறவே இல்லை. இனால் தமிழகத்தின் கவனம் இவரது பக்கம் திரும்பியது. இதனால், எரிச்சல் அடைந்த அந்த நிறுவனம் சகாயத்தின் இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மூலம் இடைக்காலத் தடை பெற்று தனது பண பலத்தை நீருபித்தது. கோவையில், சிவில் சப்ளைஸ் துறையி்ன் துணை ஆணையராக சகாயம் இருந்த போது, வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதை கண்டுபிடித்து ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். பெரிய பெரிய பல்வேறு ஹோட்டல்களில் இவரே நேரடியாக ரெய்டு நடத்தி அதிரடியாக சிலிண்டர்களைக் கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது , இது போன்ற மோசடி செயல்களால் எண்ணை நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 4000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்ததோடு, . அது குறித்து அரசுக்கும் விரிவான அறிக்கை அனுப்பி வைத்து அரசின் பாராட்டை பெற்றார். தமிழகத்தின் தலைநகரத்தில் சகாயம் வருவாய் அதிகாரியாக பணியாற்றிய போது, தமிழகத்தில் அதிகார பலம் மிக்க பிரபல ஹோட்டலான சரவண பவன் அண்ணாச்சி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ 200 கோடி மதிப்புள்ள நிலத்தை நாட்டிற்கு மீட்டுக் கொடுத்தார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் பேசியபோது ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தங்களது சொத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது பொதுவான விதி. நான் அதையும் தாண்டி, எனது சொத்து விவரத்தை மக்களுக்கும் சேர்த்து தெரியப்படுத்தியுள்ளேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஏழை, எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவேன். அதுவே எனது லட்சியம் . நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல்தான மிகப் பெரும் தடைக்கல் என்பது எனது கருத்து. நான் ஊழல் கரையோடு இருக்க மாட்டேன் என்பதை வெளி்ப்படுத்தும் வகையில்தான் இந்த சொத்துக் கணக்கு விவர வெளியீட்டுள்ளேன். நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்றார் மிக தன்னடக்கமாக. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவகங்களில் உள்ள அரதிகாரிகள் இன்றைக்கு கிடைத்த லஞ்சம் எவ்வளவு என கணக்கு பார்க்கும் இந்த காலத்தில் லஞ்சம் தவிர். நெஞ்சம் நிமிர் என தனது அறையின் கதவில் வாசகத்தை அற்புதமாக பதிய வைத்ததோடு அதை பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றார். அன்று ஒரு அப்துல் காலம். இன்று ஒரு சகாயம். இவர்களை பின்பற்றினால் நாடு லஞ்சம் வஞ்சம் இல்லா வல்லரசு ஆவது உறுதி.
4 தமிழ்மீடியாவிற்காக நாமக்கல்லிருந்து ரேவதிவேலு
படங்கள் - எம். ஆனந்தகுமார். |
| Last Updated on Wednesday, 23 December 2009 01:03 |
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...









உங்கள் கருத்துக்கள்
மைதிலி.மானசா.கருர்