விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ?ஏமந்தது அவாகள் அல்ல நம்ம மக்கள் தான்,
சா
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..நல்ல செயல்!
இந்த முயற்ச்சிக்கு நன்றி
உண்மைவிரும்பி(எ)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அரசதலைவர் தேர்தலும், வாரிசு அதிகாரமும், சரத் பொன்சோகாவும் ! |
| Written by editor |
| Saturday, 26 December 2009 14:53 |
|
இந்தக் கருத்துக்கணிப்புக்களும் புலனாய்வு அறிக்கைகளும் ஆளும் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதுவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிலை தடுமாற வைத்துள்ளது. அந்த உண்மையை ஜீரணிக்க முடியாது அவர் கடும் சினமடைந்துள்ளார். இதனால் இவ்வாறு கூறும் அமைச்சர்கள் மற்றும் நபர்கள் மீதும் அவர் சீறிப் பாய்ந்துள்ளார். "கடந்தவாரம் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தேர்தல் நிலைவரம் குறித்து உரையாடுகையில் ஜெனரல் சரத் பொன்சேகா 52 வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவார் என புள்ளிவிபரங்களில் உறுப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கின் நிலைமை படுமோசமாக ஜெனரலுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. காவற்துறைப் பொறுப்பதிகாரிகளும், ஊடகத்துறையினரும் சரத் பொன்சேகாவே வெற்றிப் பெறுவார் என கூறுகின்றனர். இதனால் நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும்" என ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ஜனாதிபதி “ஓய் உமக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறி லக்ஷ்மன் யாப்பாவை திட்டித் தீர்த்திருக்கிறார். உண்மையை ஜீரணிக்க முடியாத ஜனாதிபதியின் இந்தப் போக்கு ஆளும் கட்சிக்குள் அதிருப்திகளை உருவாக்கியிருக்கிறது. ஏற்கெனவே ஜனாதிபதியாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்குள் பூசல்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்து வரும் விடயங்கள் கணக்கில் கொள்ளப்படாதிருப்பது நெருக்கடிகளை வளர்த்துச் செல்வதாக இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கி, ஜெனரல் சரத் பொன்சேகாவை விமர்சித்தார் எனில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் எண்ணத்தை கைவிட வேண்டியேற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அரசாங்க அமைச்சர்களுடன் இடம்பெற்ற உட்தரப்பு பேச்சுவாரத்தையொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்ச, ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் மைத்திரிபால சிறிசேன அங்கு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் ஜனாதிபதிக்கும் அறிவித்திருக்கிறார். ஏனினும் பிரதமர் பதவியை குறிவைத்து செயற்படும் கோத்தபாய ராஜபக்சவோ தனது நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொண்டதாக இல்லை. நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றிலும் இதேபாணியில் அவர் உரையாற்றியிருக்கிறார். நாமலைப் பொறுத்த அளவில் இது ஒன்றும் புதிய பெரிய விடயமல்ல. அவர் பணத்தினால் எல்லாவற்றையும் சாதித்து விடக் கூடியவர். வர்த்தக உலகில் மிஸ்டர் டென் பேர்சன்ட் என குறிப்பிடப்படும் பசில் ராஜபக்சவை மிஞ்சுமளவில் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஸபக்ச மாஸ்டர் டென் பேர்சன்ட் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது ஜனாதிபதியின் அதிகாரத்தை கையில் எடுத்த வியாபாரியாக மாறியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூட்டிக்காட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவில் போரின் பின்னதாக மஹிந்த குடும்பத்தினரை அரசபரம்பரம்பரையாகக் கட்டமைக்கும் பிரச்சாரமும், அதிகார வாரிசு உருவாக்கமும், மிக உச்சமாக நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரம் எவ்வாறு வடிவமைக்கப்டுகிறது என்பதையும், அதற்கு உடனிருப்பவர்களையும் கிழே வரும் பாடலில் காணலாம். - இலங்கன்
|
| Last Updated on Saturday, 26 December 2009 16:52 |
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!
- இலங்கை அகதிகள் தொடர்பில், ஐ.நா புதிய மீளாய்வு - புகலிட கோரிக்கை, நிராகரிக்கும் சாத்தியம்?


டுவிட்டர் 
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்குமிடையே கடும் போட்டி காணப்படுவது புலப்பட ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்களை அரசாங்கம் அறிவித்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீளவும் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டன.
உங்கள் கருத்துக்கள்