பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| எவரெஸ்ட், எட்டி விடும் உயரம்தான்! |
| Written by editor |
| Thursday, 07 January 2010 11:51 |
|
காட்சி 1 : +2வில் கார்த்திக்கின் மார்க் 1200க்கு 1080. இவருக்கும் என்ஜினியரிங் படிக்கவே ஆசை. சமோசா விற்று கிடைக்கும் வருமானம் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாகப் போகிறது. எங்கிருந்து மகனை என்ஜினியரிங் படிக்கவைப்பது என்று யோசித்தார் அவரது அப்பா. பேசாமல் ஒரு வண்டி வாங்கி, நாமும் சமோசா வியாபாரத்தில் இறங்கி விடலாமா என்று மனதை கல்லாக்கிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தார் கார்த்திக். மேற்கண்ட இரு காட்சிகளிலும் சொல்லப்பட்டதைப் போல நம் நாடெங்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான திவ்யாக்களும், கார்த்திக்குகளும் இருக்கிறார்கள். காசில்லை என்பதற்காக கல்வியை கைவிடுவது எவ்வளவு கொடுமையானது? நல்ல வேளையாக திவ்யாவுக்கும், கார்த்திக்குக்கும் கைகொடுக்க ‘எவரெஸ்ட்’ முன்வந்தது. திவ்யா இப்போது அவர் இருக்கும் பகுதியிலேயே தான் ஆசைப்பட்ட கல்லூரியில் என்ஜினியரிங் படிக்கிறார். கார்த்திக் திருச்சியில் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். நன்றி எவரெஸ்ட்! எவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர். சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். எவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு. எங்கே, எப்படி தொடங்கப்பட்டது எவரெஸ்ட்? அது ஒரு தனி கதை. ஆரணியைச் சேர்ந்த கார்த்தீபனின் அப்பா ஒரு வீடியோகிராபர். அம்மா ஒரு பள்ளியில் தலைமையாசிரியை. அருகிலிருந்த பத்தியாவரம் பள்ளியில் படித்தார் கார்த்தீபன். வயலுக்கு நடுவே பள்ளி. ரம்மியமான சூழல். ஆனால் அப்பள்ளியில் படித்த பல மாணவர்களும் குழந்தைத் தொழிலாளர்கள். படிப்பு என்பதை பகுதிநேரப் பணியாக வைத்திருந்தார்கள். பள்ளி முடிந்ததுமே தனது பக்கத்து சீட் மாணவன் பஞ்சர் ஒட்டும் வேலைக்கு அவசரமாக ஓடுவதை கண்டார் கார்த்தீபன். அரசுப்பள்ளியில் கட்டணம் என்பதே மிகச்சொற்பமானது. அதை கட்டக்கூட இயலாத வகையில் அம்மாணவர்களுக்கு வறுமை. பசுமரத்தாணியாய் பத்தியாவரம் கார்த்தீபனின் மனதில் பதிந்தது. இந்த மாணவர்களுக்கு யாராவது உதவ வேண்டுமே? யார் உதவுவார்கள். சேலத்தில் என்ஜினியரிங் படித்தபோது, சில சேவை அமைப்புகளோடு சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார். நான்காம் ஆண்டு படித்தபோது, தன்னோடு ஒத்தக் கருத்து கொண்ட சில நண்பர்களோடு பேசினார். காசுக்காக கல்வி யாருக்கும் மறுக்கப்பட்டு விடக்கூடாது. என்ன செய்யலாம்? சமூகம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பங்களிக்கிறது. சமூகத்துக்கு தனிமனிதனின் பங்களிப்பு என்ன? எவரெஸ்ட் ரெடி. ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததும், தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை தனியாக தரும்படி அம்மாவை கேட்டார் கார்த்தீபன். “எதுக்குப்பா?” “எங்கிட்டே இப்போ நிறைய காசிருக்கு. இல்லாதவங்களுக்கு இதில் கொஞ்சமாவது கொடுக்கணும் இல்லையா?” கார்த்தீபனின் நண்பர்களும் கைகொடுத்தார்கள். நான்காயிரம் ரூபாய் தயார். திருவண்ணாமலைக்கு அருகில் சிறுமூர் என்றொரு கிராமம். அங்கிருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள். காலையில் பூப்பறிக்கும் வேலை. முடிந்ததும் பள்ளிக்கு வருவார்கள். மாலையில் மீண்டும் பூ விற்பனை. இந்த மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகங்கள் என்று வாங்கித் தந்து தங்கள் அமைப்பின் சேவைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார்கள். சேவை ஒரு போதை. மீண்டும் மீண்டும் சேவை செய்யத் தூண்டும். அடுத்தடுத்து தாங்கள் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியை சேவைக்கு ஒதுக்கத் துவங்கினார்கள். கல்விக்கான சேவைதான் முதல் இலக்கு. ஏனெனில் கல்வி எல்லாவற்றையும் பெற்றுத் தரும். பிரதீப் என்ற நண்பர் தொடர்ச்சியாக தனது சம்பளத்தில் இருந்து ஐநூறு ரூபாய் கொடுத்துவந்தார். அவருக்கு சம்பள உயர்வு தரப்பட்டபோது, ஐநூறை எழுநூற்றி ஐம்பது ஆக்கினார். சேவை ஒரு தொற்றுநோய். நீங்கள் சேவை செய்பவராக இருந்தால், உங்கள் நண்பர்களும் செய்ய விரும்புவார்கள். கார்த்தீபன், பிரதீப் போன்றவர்களின் ஆர்வம் அவர்களது நண்பர்களுக்கு தொற்றிக் கொண்டது. பத்து பேராக இருந்தவர்கள் நூறு பேரானார்கள். நூறு பேர் ஆயிரமாக, இப்போது ஆயிரம் மூவாயிரத்து ஐநூறாக பெருகி நிற்கிறது. இதெல்லாம் வெறும் நான்கு ஆண்டுகளிலேயே நடந்த வெற்றிக்கதை. இப்போது எவரெஸ்ட் அமைப்பின் உதவிக்கரம் நீண்டுவிட்டது. ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு கை கொடுக்கிறது. இவர்களின் உதவிகளைப் பெற்றவர்களும், மற்றவர்களும் உதவ வேண்டுமென்ற மனப்பான்மையோடு இவர்களது அமைப்பில் சேருகிறார்கள். முதல் பத்தியில் வந்த கல்லூரி மாணவியான திவ்யா இப்போது ஆறு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கிறார். “நான் என் பெற்றோரின் கண்ணாடி. மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் என் பெற்றோரே!” – சமூகச்சேவைக்கு நேரமும், பணமும் செலவழிப்பதால் வீட்டில் பிரச்சினை இல்லையே என்று கேட்டதற்கு இப்படி பதில் சொல்லுகிறார் கார்த்தீபன். “நீங்கள் சொல்லுவதைப் போல பிரச்சினை வரவும் வாய்ப்புண்டு. எப்படி என்றால் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும், ஊருக்கு வாரியிறைத்துவிட்டு வீட்டை பட்டினிப்போட்டால் நிச்சயம் பிரச்சினை வரும். எனவே சமூகசேவை செய்ய வரும் இளைஞர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கினால் போதுமானது. வெறும் பணத்தை பங்களிப்பது மட்டுமே சேவையல்ல. சினிமாவுக்கும், பீச்சுக்கும், பார்க்குக்கும் பொழுதுபோக்க போகிறோமில்லையா? அதுபோல சமூகசேவைக்கும் மாதத்தில் ஒரு நாள் ஒதுக்கலாம். அந்த நாளை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கோ, பின் தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு தருவதற்கோ பயன்படுத்தலாம். இன்று பணத்தை விட, நேரடிப் பங்களிப்பே நம் சமூகத்துக்கு அதிகமாக தேவைப்படுகிறது” என்று மேலும் சேர்த்துக் கொண்டார். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் கார்த்தீபனுக்கு வயது 24. அவரது நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பிருந்தும், நாசூக்காக மறுத்திருக்கிறார். “வெளிநாட்டுக்கு போனால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். எனக்கு இங்கே கிடைக்கும் இருபதாயிரமே போதும். என் சமூகத்தோடு, என் மக்களோடு, என் நாட்டில் வாழ்வதே எனக்கு திருப்தி. பணம் சம்பாதிப்பது நிம்மதிக்குதானே? அது இங்கு கிடைக்காமல் வேறு எங்கு கிடைக்கும்?” – ஆன்சைட் வேலை கிடைக்காதா என்று பலரும் அலையும் நேரத்தில் வித்தியாசமாக சிந்திக்கிறார். டாக்டர் கலாமும், மகாத்மா காந்தியும் தான் கார்த்தீபனுக்கு இன்ஸ்பிரேஷனாம். எவரெஸ்ட் குழு, டாக்டர் கலாமுக்கு எப்போதுமே செல்லமான குழு. அவ்வப்போது அழைத்துப் பாராட்டி ஆலோசனைகளும் வழங்குகிறார். எவரெஸ்ட் அமைப்பினர் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் மாணவர்களுக்கு அறிவுப்போட்டிகள் நடத்தி வருகிறது. கடந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்களை தங்கள் போட்டிகளில் கலந்துகொள்ள இலக்கு நிர்ணயித்தார்கள். கூடுதலாக பத்தாயிரம் பேர் கலந்துகொண்டார்கள். வெற்றி பெறுபவனை மட்டுமே போற்றுவது என்பது நெருடலான விஷயமில்லையா? பங்கெடுப்பவர்கள் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள் இல்லையா? அதனால்தான் எவரெஸ்ட் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும், பரிசுகளும் வழங்குகிறது. “எங்கள் அமைப்பினர் எப்போதும் உதவ தயாராக இருக்கிறோம். யாருக்கு உதவி தேவை என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்கிறார்கள் எவரெஸ்ட் அமைப்பினர். இவர்களைப் போல இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ முன்வந்தால், இந்தியாவில் இல்லாமை என்ற சொல்லே எதிர்காலத்தில் இருக்காது. எக்ஸ்ட்ரா மேட்டர் 1 : எவரெஸ்ட் அமைப்பின் சார்பில் ‘இளம் இந்தியா’ என்றொரு நீதிநூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூலில் உலகத் தலைவர்களின் 100 வெற்றிக்கதைகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த அமைப்பினைச் சேர்ந்த 23 பேர் சேர்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார்கள். காலையில் பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்நூலில் உள்ள தலைவர்களின் கதைகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டி, ஒவ்வொரு பள்ளிக்கும், மாவட்ட கல்வித்துறை மூலமாக இந்நூலை இலவசமாக வழங்குகிறார்கள். ரூ.25/- செலுத்தி, யார் வேண்டுமானாலும் ‘இளம் இந்தியா’ நூலை வாங்கி, தங்கள் பகுதி குழந்தைகளுக்கு கதை சொல்லலாம். எக்ஸ்ட்ரா மேட்டர் 2 : எவரெஸ்ட் அமைப்பினரை குறுஞ்செய்தி (SMS) மூலமாக தொடர்பு கொள்ள : +919976953287. மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it இணையத்தளம் : http://teameverest.wordpress.com பதிவகம்: 'யுவகிருஷ்ணா' |
| Last Updated on Thursday, 07 January 2010 12:02 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...









.jpg)

சமுக அக்கறை கொண்ட ஒரு பதிவாகக் காணப்படும் இந்தக் கட்டுரை, மேலும்பலர் பயன்பெறவும், பயன் தரவும், ஊக்கியாக அமைந்துள்ளமையால் அதே நோக்கோடு , கட்டுரையாளருக்குரிய நன்றிகளுடன், வலைப்பார்வை பகுதியிலும்,மீள் பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team
உங்கள் கருத்துக்கள்