கொழும்பு துறைமுகத்திற்கு அண்மைய கடலில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் நாட்டில் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வெளியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளது. அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் பெய்யக்கூடும். எனவே, வீடுகளுக்கு வெளியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment