கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்து பயணக் கட்டுப்பாடுகளை மே 31ஆம் திகதி தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நாட்டின் நிலைமைகளை அவதானித்தே இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 31ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தல் குறித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போது மக்களின் செயற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதி கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment