counter create hit வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளை ஜனாதிபதி விஜயம்!

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளை ஜனாதிபதி விஜயம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வவுனியாவிற்கு நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விஜயம் செய்யவுள்ளார்.
வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கே விஜயம் செய்யவுள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக இது தரமுயர்த்தப்பட்டிருந்தது.

இதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது முன் அனுமதி பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்களுக்கு மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.