counter create hit இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் சில நிறுவனங்கள் நியமிப்பு

இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் சில நிறுவனங்கள் நியமிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் சில நிறுவனங்கள் நியமிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சாரம், எரிசக்தி ஆகிய இராஜாங்க அமைச்சுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, 1990 சுவாசார்யா அறக்கட்டளை, தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபை ஆகியவை சுகாதார அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரச சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆயுர்வேத திணைக்களம், ஆயுர்வேத வைத்திய சபை, இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் திணைக்களம், அரச அச்சக திணைக்களம் மற்றும் இலங்கை அச்சக நிறுவனம் என்பன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய மொத்த விற்பனை முனைய நிறுவனம், திருகோணமலை பெற்றோலிய முனைய நிறுவனம், இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் எல்லைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.