counter create hit நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மின்வெட்டுக்கான திட்டம் எதுவும் இலங்கை மின்சார சபைக்கு இல்லை.
நாடளாவிய ரீதியில் உள்ள நுகர்வோருக்கு தடையின்றி மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை உறுதி செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கான திட்டம் எதுவும் இலங்கை மின்சார சபைக்கு இல்லை என தெரிவித்தார்.

மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கு தேவையான மேலதிக மின்சாரத்தை இலங்கை மின்சார சபை கொள்வனவு செய்யும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நீர் விநியோக முறைக்கு சரியான தீர்மானம் எட்டப்படவில்லை இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula