counter create hit தெஹிவளை மிருகக்காட்சி சாலை பிரதான பாதுகாப்பு அதிகாரியின் உயிரை பறித்த மின் கம்பம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை பிரதான பாதுகாப்பு அதிகாரியின் உயிரை பறித்த மின் கம்பம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரதான பாதுகாப்பு அதிகாரியின் உயிரை பறித்த அனர்த்தம்
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்ற விபத்தில் அதன் பிரதான பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார்.

54 வயதான உபுல் செனரத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலையை அண்மித்து நேற்றைய தினம்(15) இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.

மிருக வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன், அந்த மரம் மின் கம்பத்தில் சாய்ந்தமையினால் மின் கம்பமும் முறிந்துள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனருகில் சென்றுகொண்டிருந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின் கம்பம் வீழ்ந்துள்ளத .

விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான பிரதான பாதுகாப்பு அதிகாரி, களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula