counter create hit புதிய பஸ் சாரதிகள், நடத்துனர்களை சேவையில் இணைக்க தீர்மானம்

புதிய பஸ் சாரதிகள், நடத்துனர்களை சேவையில் இணைக்க தீர்மானம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மாதாந்தம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போக்குவரத்து சபை.
நாட்டில் பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதனால் அவர்களுக்கு பதிலாக புதிய நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிய வருகையில், பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பேருந்து நடத்துனர்கள் 381 பேரையும் சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula