counter create hit மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் - வலுவாக கால்பதிக்கும் சீன நிறுவனம்

மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் - வலுவாக கால்பதிக்கும் சீன நிறுவனம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு நாட்டிலுள்ள மேலும் ஐம்பது எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை வழங்கியுள்ளது. அவற்றில் 145 எரிபொருள் நிலையங்களை பொறுப்பேற்பதற்கு அந்த நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

தற்போது மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்காக அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த எரிபொருள் நிலையங்களில் எண்ணிக்கையை 200 ஆக மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பில் ஆட்சேபனைகளிருந்தால், வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்களை பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula