பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
வசீம் கான் கடந்த 2019இல் அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் இஷான் மணியால் அந்த நாட்டு கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இஷான் மணியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் விரும்பவில்லை.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை பிரதமர் இம்ரான் கான் நியமித்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் இஷான் மணியால் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்ட வசீம் கான், தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.
Comments powered by CComment