counter create hit 3-வது வீரராக அதிவேகமாக 6 ஆயிரம் ரன்னை கடந்த லோகேஷ்ராகுல்

3-வது வீரராக அதிவேகமாக 6 ஆயிரம் ரன்னை கடந்த லோகேஷ்ராகுல்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ கேப்டன்
லோகேஷ் ராகுல் 30 ரன் எடுத்தார்.

இதன்மூலம் சர்வதேச ஐ.பி.எல். போட்டி உள்பட 20 ஓவர் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்னை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 179 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார்.

இதற்கு முன்பு விராட் கோலி 184 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். அவரை லோகேஷ் ராகுல் முந்தினார். ஒட்டுமொத்தமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்னை கடந்தவர்களில் லோகேஷ் ராகுல் 3-வது வீரர் ஆவார்.

முதலிடத்தில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்ல் (162 இன்னிங்ஸ்), 2-வது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் (165 இன்னிங்ஸ்) உள்ளனர்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் முதலிடத்தில் விராட்கோலி 3296 ரன்னுடன் உள்ளார். 2-வது இடத்தில் ரோகித்சர்மா (3313 ரன்), 3-வது லோகேஷ் ராகுல் (1831 ரன்) உள்ளனர்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.