counter create hit செர்பியா ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் ஆண்ட்ரே ரூப்லெவ்

செர்பியா ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் ஆண்ட்ரே ரூப்லெவ்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
டென்னிஸ் தரவரிசையில் உலக அளவில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை போராடி வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மோதினர்.

முதல் செட்டை ஆண்ட்ரே ரூப்லெவ் 6- 2 என எளிதில் வென்றார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சுதாரித்து ஆடிய ரூப்லெவ் 6-0 என கைப்பற்றினார்.

இறுதியில், ரூப்லெவ் 6-2, 6-7(4), 6-0 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த போட்டி மொத்தம் இரண்டு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது. 

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula