சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் சுவிற்சர்லாந்தில் உயிரிழந்த 9,300 மக்களை நினைவுகூருவதற்காக, மார்ச் 5 ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர் கை பார்மலின்தேசிய தொலைக்காட்சியின் பிரெஞ்சு ( ஆர்.டி.எஸ் ) மாலை செய்திக்கு அளித்த பேட்டியில்தெரிவித்துள்ளார்.
" குறித்த நினைவு விழாவை ஏற்பாடு செய்யஇது சரியான நேரம் அல்ல, குறிப்பாக தொற்றுநோயியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசாங்கம் விரும்பவில்லை. " ஆனால் சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் முதல் இறப்பின் ஒரு வருடம் கழித்து, வரும் வெள்ளிக்கிழமை நீங்கள், நமது நாட்டில் பேரிடரில் பலியான 9,300 நினைவில் இருக்குமாறு கேட்டுள்ளார்.
"நோய்வாய்ப்பட்ட அல்லது நேசித்தவரை இழந்த ஒருவரை அனைவருக்கும் தெரியும், இந்த தொற்றுநோயின் வலி தெரியும்" என அவர் மேலும் கூறினார். இது தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்